விசாலம்

காலம் காலமாக இசையில் மன்னர்களும் ஈடுபட்டு இசையை ஆதரித்து வந்தனர்முகலாயமன்னர் சக்கர்வத்தி அக்பர் ஹிந்துஸ்தானி இசையை ஆதரித்து தன் அவையில் அடிக்கடி இசை தர்பார் நடத்தினார்.அதில் முக்கிய பங்கு வகித்த தான்சன் மஹராஜை மறக்கமுடியாது. அவர் இசையில் பெரிய ஐஸ் பாறையும் உருகிவிடும். குப்தர்கள் வம்சத்தில் பலர் இசையில் வல்லுனராக இருந்தனர் சக்கரவர்த்தி சமுத்திரகுப்தா வீணை மிக அழகாக வாசிப்பாராம் அவர் ஆண்ட போது அவர் யாழ் வாசிக்கும் உருவத்தில் காசுகள்அடிக்கப்பட்டன. மேவார் நாட்டு மன்னர் மீராபாயின் கணவர் ராணாவும் இசையில் தேர்ச்சி பெற்றவர்.நடனக்கலையும் அறிந்தவர்.”சங்கீத மிமாம்சா “என்ற புத்தகம் எழுதியிருக்கிறார்.

தஞ்சாவூரை ஆண்ட பல அரசர்கள் இசையில் தேர்ச்சிப்பெற்று பல புத்தகங்கள் எழுதியிருக்கின்றனர்.சரபோஜி மன்னரும் நன்கு பாடுவாராம் ரகுநாத நாயக் என்ற மன்னர் “சங்கீத சுதா’ என்ற புத்தகம் எழுதியிருக்கிறார்.மிதிலையின் மன்னர் நன்யபூபாலா “சரஸ்வதி ஹிருதயலங்காரா’ என்னும் பெரிய புத்தகத்தை எழுதியிருக்கிறார். ஷாஜி மஹராஜா “பல்லகி சேவா பிரபந்தம் “என்னும் நூலை எழுதியிருக்கிறார்.

தென் இந்தியாவில் மஹாராஜா திரு ஸ்வாதி திருநாள் அவர்களின் கிருதிகள் அபூர்வமானவை. திருவாங்கூரை ஆண்ட அரசர்கள் பலர் பல பாடல்களை இயற்றினர்.அதில் திரு ஸ்வாதிதிருநாள் ஆண்ட காலத்தில் இசை சிகரத்தைத் தொட்டது.

மன்னர் ஸ்வாதித்திருநாளுக்கு பல பெயர்கள் உண்டு.பத்மநாபதாசர் ஸ்ரீராமாவர்மா குலசேகர பெருமாள்.வாஞ்சிபலர் , ஆகியவை…..இவர் பிறந்த நட்சத்திரம் சுவாதி ஆனதால் இவர் சுவாதிதிருநாள்: என்று அழைக்கப்பட்டார்.இவர் பிறந்த் இரண்டாண்டுகளிலேயே இவரது அன்னை லட்சுமி பாய் இயற்கை எய்தினார்.தந்தை திருராஜராஜவர்மா தனித்துவிடப்பட்டார்.

மன்னர் சுவாதித்திருநாளுக்கு பல மொழிகள் தெரியும் முக்கியமாகசம்ஸ்கிருதம் பார்சீயமொழி.கன்னடம் மராத்தி உருது ஆங்கிலம் ,மலையாளம், தெலுகு ,நன்கு பேச எழுத முடிந்தது இந்தமொழிகளில் அவர் பாடல்களும் இயற்றியிருக்கிறார். இவருடைய இசையினாலேயே திருவாங்கூர் இசையில் முதன்மை இடத்தைப்பிடித்தது.

இவரது ராகமாலிகை ‘பன்னகேந்தரசயனா “எட்டு ராகங்கள் கொண்டது கேட்க மிகவும் ரஞ்சகமாக இருக்கும் இவருடைய வர்ணங்க்ளில் அடதாள வர்ணங்கள் “விரிபோணி பைரவி ராகம் வனஜாட்சி கல்யாணி ராகம். ‘கனகாங்கி’ தோடி ராகம் பல கச்சேரிகளில் ஆரம்பமாக இருக்கும். அதன் அழகையும் நடையையும் ஸ்வரபிரஸ்தாரங்களையும் சொல்ல வார்த்தைகள் இல்லை.

இப்பவும் திருவனந்தப்புரத்தில் அவர் பெயரில் ஸ்வாதித்திருநாள் விழா நடத்தப்பட்டு அதில் பல பிரதான வித்துவான்கள் அவருடைய பாடல்களைப்படி கௌரவிக்கின்றனர்.குழந்தைகளே இசையில் நாட்டம் கொள்ளுங்கள்.குரல் வளமும் ஆர்வமும் இருந்தால் போதும்.ஒரு நல்ல குரு மூலம் சிரத்தையாகக் கற்றுக்கொள்ளுங்கள்/ மனதுக்கு அமைதியும் ஆனந்தமும் கொடுப்பது இந்த இசைதான்.. பலர் இசையினால் தனக்குப்பிடித்த இறைவனை தரிசித்திருக்கின்ற்னர.உம் மீராபாய். ஸ்ரீ தியாகராஜர். ஸ்ரீ முத்துசுவாமி தீட்சதர். ஸ்ரீ சியாம சாஸ்த்திரி.ஸ்ரீ புரந்தரதாசர்.ஸ் அன்னம்மாசார்யா. என்று அடுக்கிக்கொண்டே போகலாம் சும்மா டிவியில் சீரியல் மட்டும் பார்க்காமல் நிறைய இசை சம்பந்தப்பட்ட படைப்பையும் பாருங்கள்…

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *