டி.விப்ரநாராயணன்

24-03-2014

அன்புள்ள மகள் மணிமொழிக்கு

நீ எப்படி இருக்கிறாய்? பேரன் அருண் நன்றாக படிக்கிறானா? மாப்பிள்ளைக்கு ப்ரொமோஷன் கிடைக்கப் போகிறது என்று சென்ற கடிதத்தில் எழுதியிருந்தாய். கிடைத்துவிட்டதா? மாமனார் மாமியார் எப்படியிருக்கிறார்கள்?

எதிர் வீட்டுப் பெண் தனக்குப்பார்த்த மாப்பிள்ளையை நிச்சயதார்த்தம் நடந்த பத்து நாட்களுக்குப்பின்  மாப்பிள்ளையைப் பிடிக்கவில்லை என்று சொல்லி விட்டாளாம் என்று எழுதியிருந்தாய்..  மற்றொரு பெண் மாமனார் மாமியார் இல்லாத வீட்டில்தான் தான் கல்யாணம் செய்துகொள்வேன் என்று சொல்கிறாள் என்றும் குறிப்பிட்டிருந்தாய். மேலும் மிகவும் கவலைப் பட்டு எழுதியிருந்தாய்.. நீ சொல்வது உண்மைதான். இப்பொழுது பையனுக்கோ பெண்ணுக்கோ திருமணம் நடக்கும் வரைக்கும் பயமாக இருக்கிறது என்று பெற்றொர்கள் சொல்கிறார்கள். திருமணம் ஆனபின்பும் கவலைதான். முன்காலத்தில் மாமியார் கொடுமை, நாத்தனார் கொடுமை என்று கேள்விப்பட்டோம். இன்றோ மருமகள் கொடுமை என்று கேள்விப்படுகிறோம்.

ஒரு நண்பர் ஒரு செய்தி சொன்னார்.நிச்சயமான பின்பு. பெண்ணும் பிள்ளையும் வெளியில் சென்றிருக்கிறார்கள். அப்பொழுது அவள் இளநீர் கேட்டிருக்கிறாள். அவனும் இளநீர் விற்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறான் இளநீர் விற்பவரிடம் இளநீர் ஒன்றின் விலை என்ன என்று கேட்டிருக்கிறான். அவன் 25 ரூபாய் என்றிருக்கிறான். உடனே அந்தப் பையன் 20 ரூபாய் வைத்துக் கொள் என்று பேரம் பேசியிருக்கிறான். உடனே அந்தப் பெண் பேரம் பேசும் மாப்பிள்ளை வேண்டாம் என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்து நடந்ததைக் கூறிவிட்டு திருமணத்தை நிறுத்தி விட்டாளாம் அந்தப் பெண். மற்றொரு செய்தி. ஒரு பையன் பெண்ணைப் பார்த்துவிட்டு பிடித்திருக்கிறது என்று சொல்லிவிட்டு திருமணம் ஆனபின்பு பெண்ணின் பெற்றொர்கள் தங்கள் பெண்ணைப் பார்க்க வரக் கூடாது என்றானாம். இவ்வாறு பல கதைகள் என் செவியில் விழுந்தன.

நீ ஏன் இவ்வாறு நடக்கிறது ? இதற்குக் காரணம் என்ன என்று கேட்டிருந்தாய்?

குழந்தைகளை வளர்ப்பதில் பெற்றொர்கள் தவறு செய்து விடுகிறார்கள். அவர்களின் எதிர்காலம் பற்றி ஒரு அச்சத்தை தோற்றுவித்தே குழந்தைகளை வளர்க்கிறார்கள். வாழ்க்கையை நேசிக்கக் கற்றுக் கொடுக்க வில்லை. சுதந்திரம் என்ற சொல்லின் பொருளைத் தவறாகத் தெரிந்துகொண்டு தங்கள் வாழ்வை அழித்துக் கொள்கின்றனர். .உன்னைத் திருமணம் செய்து கொடுத்தபோது இப்படியெல்லாம யோசித்தோமா.. மாப்பிள்ளயின் சம்பளம் ரூபாய் 200000 தான். அவர்கள் பெற்றொர்கள் உன்னுடன் தான் இருக்கிறார்கள்.. உனக்கு என்ன கஷ்டம் வந்து விட்டது. இப்பொழுது மாப்பிள்ளை நல்ல சம்பளம் வாஙுகுகிறார்.. வரவுக்கு ஏற்ற செலவு செய்து வாழ்க்கையை நன்றாகவும் சந்தோஷமாகவும் நடத்துகிறீர்கள்.

வாழ்க்கையைக் கண்டு அச்சப்படக் கூடாது, 2020 பற்றி 2014-ல் சிந்தித்து வாழ்க்கையைத் தொலைப்பவர்கள் அனேகர். இக்காலப் பையன்களும் பெண்களும் – குறிப்பாக கணிணித் துறையில் பணிபுரிபவர்கள்—அதிக எதிர்பார்ப்பிலும் கற்பனையிலும் கருத்தைச் செலுத்தி நிகழ்காலத்தை இழந்து விடுகிறார்கள்.  பெண் பார்க்கும்போது  ஒரு பெண்  பையனிடம்,” தனக்குப் பிறக்கும் குழந்தை இண்டர் நேஷனல் பள்ளியில் படிக்கணும். அதற்கு நீங்கள் இப்பொழுது ஒப்புதல் தரவேண்டும் “ என்றாளாம்.இதெல்லாம் வேடிக்கையாக இருக்கிறது..நம் வாழ்க்கை இவ்வுலகில் நிரந்தரமல்ல. மரணம் எப்பொழுது. நிகழும் என்பது நமக்குத் தெரியாது.இலக்கு இருக்கவேண்டும். ஆசைகள் இருக்க வேண்டியதுதான் . ஆனால் ஆசையையும் தேவையயும் அதிகரித்துக் கொண்டே சென்றால் அழிவைத் தேடித்தான் செல்ல வேண்டியிருக்கும்.

நான் உனக்கு power of now என்ற நூலைப் பற்றிக் கூறியிருக்கிறேன், நம் கையில்  இருப்பது இந்தக் கணம். நடந்ததைப் பற்றி சிந்திiப்பதோ வருங்காலத்தைப் பற்றி எண்ணிக் கற்பனை காண்பதோ வீணான செயல் என்று அந்த நூல் கூறுகிறது.

நாம் யாரும் இவ்வுலகில் தனித்து வாழ முடியாது. பிறரைச் சார்ந்து வாழத்தான் வேண்டும்.. எல்லொரும் சேர்ந்து வாழப் பழகிக் கொள்ள வேண்டும். மேலை நாட்டின் தாக்கத்தால் உறவுகள் வேண்டாம் என்று பலர் எண்ணுகிறார்கள்…அது தவறு.  நான் என் நண்பர் வீட்டிற்குப் போயிருந்தேன். அங்கே அவர்களது பேரன் பேத்திகளைப் பார்த்தேன். அவர்கள் அமெரிக்காவில்  படிக்கிறார்கள்.. நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு பெரியவர் வந்தார். அவரை அந்தக் குழந்தைகளுக்கு “இவர் உங்கள் தாத்தா: என்று அறிமுகப் படுத்தினார்கள். அதற்கு அந்தக் குழந்தைகள் ”so whaat”  என்று சொல்லிவிட்டுச் சென்று விட்டனர். அதனால் மேலை நாட்டு மோகம் பணத்திற்கு மரியாதை தருகிறது. மனித நேயத்திற்கு மதிப்புத் தருவது இல்லை.

இந்தக் காலத்து இளம் சிட்டுகள் ஒரு குழப்பத்திலும் எதிர்காலத்தைப் பற்றிய பயத்திலும் சிந்தனைகளை ஓடவிட்டுக் கொண்டிருப்பதால் அவர்கள் சிந்தனையில் தெளிவு இல்லை. ஆகவே பெற்றொர்கள் தான் அவர்களை நல்வழிப் படுத்த வேண்டும்.

சரி. நீ ஒருகதை எழுதப் போகிறேன் என்று எழுதியிருந்தாயே. எழுதத் தொடங்கி விட்டாயா? வினோபா எழுதிய கீதைப் பேருரைகளைப் படித்து முடித்து விட்டாயா? எப்பொழுதும் நிறைவான மனதுடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கு என் அன்பைச் சொல்.

இப்படிக்கு

உன்பிரியமுள்ள அப்பா

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.