தமிழுக்கும் அமுதென்று பேர்..
கவிஞர் காவிரி மைந்தன்
தமிழுக்கு அமுதென்று பேர் – பாரதிதாசன் – விஸ்வநாதன் ராமமூர்த்தி.. பி.சுசீலா – கே.ஆர்.விஜயா
நம் தாய்மொழி தமிழின் அழகை, இனிமையை,பெருமையை இதைவிட வேறெந்தக் கவிதையிலும்ஒருசேர உயர்த்திச் சொன்னவரில்லை என்னும் பெருமையைத் தட்டிச் செல்கிறார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்!
குறிப்பாக பஞ்சவர்ணக்கிளி திரைப்படத்தில்பயன்படுத்தப்பட்ட பாரதிதாசன் கவிதையிது! கதையின்நாயகி வாயிலாகக் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் -தமிழை நேசிக்கின்ற நெஞ்சம் தனக்கு எவ்வளவு இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.
பாடும் குயிலாய் தமிழ்த்திரையிசையில் பவனிவரும் பி.சுசீலா அமுதையே பொழிந்து தந்திருக்கிறார். அழகிய குழந்தைக்கு மேலும் அழகு சேர்க்க ஆபரணங்கள் அணிவிக்கும் அன்னையைப் போல் தாயுமானவர்கள் இருவர் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி..
பொங்கும் கடலென பூரித்து எழுகின்ற சங்கத்தமிழ் முரசமன்றோ.. பாவேந்தர்! தங்குதடையில்லா தமிழினை.. தமிழ் உணர்வினை.. தமிழ் மரபினை.. வருகின்ற தலைமுறைகளுக்கு உரமேற்றி வைத்த கவிதையிது!
சொற்கள் எல்லாம் அவரிடம் ஏவல்செய்ய அணிவகுத்துநிற்க.. தமிழே கடலாகி.. அவர்தந்த முத்துக்கள்தான்அவர்தம் படைப்புகள் என்பதில் வியப்பென்ன?
தமிழை நேசிப்பதும், சுவாசிப்பதும், வாசிப்பதும்இவர்தம் வழியென்றாக..அதன் புகழை எடுத்தியம்பச்சொன்னால்.. தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்என்றும்..அறிவுக்குத் தேன் என்றும்.. கவிதைக்கு வயிரத்தின்வாள் என்றும்.. உயிருக்கு நிகர் என்கிறார்..
பாவேந்தரைப்போல் ஒரு கவிஞரை தமிழ் உலகம் காணாதிருந்தால் எழுச்சியும், இன உணர்வும், மொழிப்பற்றும் இன்றைக்கு உள்ள அளவு இருந்திருக்குமா என்பது கேள்விக்குறி! புரட்சிக்கவிஞன் என்றால் புதுவைதந்த பாரதிதாசன் என்பதற்கு இப்பாடலே முரசறையும்!
தமிழுக்கு அமுதென்று பேர் பாடல் வரிகள்
தமிழுக்கு அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்.
தமிழுக்கு நிலவென்று பேர்
இன்பத்தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நிர்
தமிழுக்கு மணமென்று பேர்
இன்பத்தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த உர்
தமிழுக்கு மதுவென்று பேர்
இன்பத்தமிழ் எங்கள் உரிமை செம்பயிருக்கு வேர்
பயிருக்கு வேர் .
தமிழ் எங்கள் இளமைக்கு பால்
ஆஆஆஆஆஆஆஆஆ
தமிழ் எங்கள் இளமைக்கு பால்
இன்பத்தமிழ் நல்ல புகழ் மிக்க புலவர்க்கு வேல்
புலவர்க்கு வேல்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வாண்
இன்பத் தமிழ் எங்கள் அசதிக்கு சுடர் தந்த தேன்
சுடர் தந்த தேன்
தமிழ் எங்கள் அறிவுக்கு தோல்
இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாழ்
வயிரத்தின் வாழ்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்