நான் அறிந்த சிலம்பு – 115

மலர் சபா

 

மதுரைக் காண்டம் – 11. காடு காண் காதை

கோவலன் மறையோனுடைய வருகை பற்றி வினாவுதல்

கோவலன் மறையோனிடம்,images (6)
“உம் ஊர் யாது?
நீவிர் இங்கு வருகை புரிந்ததற்குக்
காரணம் என்ன?” எனக் கேட்க..

மறையோன் தன் வரவின் நோக்கத்தை எடுத்துரைத்தல்

குறையாத சிறப்புடைய
அம்மறையோன் தானும்
தான் வந்ததன் காரணத்தை
எடுத்துச் சொன்னான் இங்ஙனம்.

திருவரங்கத்தில் திரு அமர் மார்பன் கிடந்த வண்ணம்

நெடிதுயர்ந்த பொன்மலைமேல்
நீல நிற மேகம்
பரந்து விரிந்து
அகலாது படிந்ததுபோலவே,
அகன்று எழுந்த ஆயிரம் தலையுடைய
அரிய வலிமை பெற்ற
ஆதிசேடன் பாம்பணை மீது
பலரும் தொழுது வணங்கிடும்,

விரிந்த அலைகளையுடைய
காவிரியாற்றின் திருவரங்கத்தில்,
திருமகள் அவள் விரும்பித் தங்கிடும்
திருமார்பினையுடைய திருமால்
பள்ளி கொண்ட கோலமதனையும்..

திருவேங்கடத்தில் நெடியோன் நின்ற வண்ணம்

அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:  32 – 53
படத்துக்கு நன்றி:
http://jayasree-saranathan.blogspot.com/

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *