திருமால் திருப்புகழ் (72)
கிரேசி மோகன்

கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
———————————————————-
’’கண்ணனை நெஞ்சே கருது’’
——————————————————-

காதுகண்வாய் மூக்குடல், பூதப் புலனைந்தும்,
ஏது உனக்கென்று எண்ணினையோ, – சூதிலன்று
பெண்ணவள் பாஞ்சாலி இன்னல் களைந்தவனை
கண்ணனை நெஞ்சே கருது….
கரம்தயிர் வெண்ணை கவர்ந்தவர் வீட்டில்,
அறம்பொருள் இன்பம் அனைத்தும் – தரும்பரம்,
பின்னிவைகள் எச்சமுற, முன்னிருத்தும் மோட்ஷமதை,
கண்ணனை நெஞ்சே கருது….
கிளரொளி இன்பம் இளமையில் தங்கும்,
தளரளி மூப்பதில் தேயும், – மலரளித்(து),
உன்னகத்தை பக்தி உணர்வால் உருமாற்ற,
கண்ணனை நெஞ்சே கருது….
தூய யமுனைத் துறைவனை, நந்தகோபன்
ஆயர் குலம்குதித்த ஆரமுதை, -சேயாக,
இன்னமுதாய் பேய்ச்சி இருமுலை உண்டவனை,
கண்ணனை நெஞ்சே கருது….
“நாணல், யமுனா நதிநெல் நிமிர்தலாய்,
கூனல் அர்ஜுனரை கீதையால்,-நாணதிர,
விண்ணென்று காண்டீப வில்லெடுக்க வைத்தவனை,
கண்ணனை நெஞ்சே கருது”!!
————————————————————————————————————–
படங்களுக்கு நன்றி
