திருமால் திருப்புகழ் (73)
கிரேசி மோகன்
கண்ணன் திருப்புகழ்….
————————————–
’’கண்ணனை நெஞ்சே கருது’’
——————————————————–
“ஈவிரக்க நெஞ்சுக்(கு) இறைத்திடும் பக்திநீர்,
நாவிறக்க மாய்வாய்ப்பண் ணாகமாறி, – போயிறக்கம்
விண்நனைய மண்ணில் விழலுக்கும் பாயும்காண்;
கண்ணனை நெஞ்சே கருது!
“ஆயர் சகாயன் ,அலேக்நிரஞ்சன், மண்தின்று,
தாயார் திகைத்திட தன்பவள -வாய்க்குள்ளே,
வண்ணமதைக் காட்டி, விசுவரூபக் காட்சிதந்த,
கண்ணனை நெஞ்சே கருது”
’’பெண்ணழகைக் கண்டு பரவசிக்கும் போதினில்,
கண்ணைப் பறிக்கின்ற காட்சியில், -உன்இடர்
புண்ணை சொறிகையில், பேரின்ப சாட்சியாய்
கண்ணனை நெஞ்சே கருது’’….
“பெண்ணொருத்தி பின்னலை பாரதிப் பிள்ளையவன்
பின்நின்(று) இழுக்கையில் பிய்ந்ததால், -மின்னலாய்,
சென்னியில் சூடி சிருங்கார கோலமுற்ற,
கண்ணனை நெஞ்சே கருது”….
“ஆடா(து) அசங்காது, வாடாது வற்றாது,
மாடோ, மனிதனோ, மாமுனியோ ,-கூடாமல்
எண்ணி எதிர்போர்க்கும், முன்னம் குதித்திடும்,
கண்ணனை நெஞ்சே கருது”
கூட்டுக் குடும்பமாய் காட்ஷி தருகின்ற,
பாட்டுக்(கு) ஒருகவி பாரதியின் -வீட்டினுக்கு,
அண்மையில் நிற்கின்ற, அல்லியூர் சாரதியை,
கண்ணனை நெஞ்சே கருது!!
——————————————————————————————————————–
படங்களுக்கு நன்றி