கிரேசி மோகன்

Krishna dancing to the tune of Yashoda's churning and asking for a handful of butter in return. And Krishna, as Kurma was instrumental in churning the entire milky ocean which brought forth the divine nectar. Keshav
Krishna dancing to the tune of Yashoda’s churning and asking for a handful of butter in return. And Krishna, as Kurma was instrumental in churning the entire milky ocean which brought forth the divine nectar. Keshav

கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
————————————————————

 

’’கண்ணன் அந்தாதி’’
———————————–

Govinda Pattabhishekam. Oil on canvas. #krishnafortoday Keshav
Govinda Pattabhishekam. Oil on canvas. #krishnafortoday
Keshav

இருப்பதிங்(கு) ஒன்றே இதன்பேர் கண்ணன்
மறுப்பதை விட்டென் மனமே -கருப்பொருளைப்
பார்க்காத போதும் பாடப் பரவசத்தில்
கார்கால மேகத்தில் காண்….(11)

காணவனைக் காற்றில் கலந்துவரும் கீதத்தில்
நானென(து) இல்லாத மோனத்தில் -தேனளவு
பார்க்கும் மலர்வண்டின் போக்கில் இனப்பெருக்கம்
கோர்க்கும் குயுக்தியின் கண்….(12)

கன்னங் கருத்தது காரிருள் போன்றது
நண்ணும் நமக்கொளி நாளது -முன்னம்
பிறக்காது பின்னர் இறக்காதாம் இன்னும்
திறவாசொர் கத்தாள் அது….(13)

அதனால் இதுவாய் இதனால் அதுவாய்
மதனால் மயங்கும் மனமே -முதலாம்
பதியாய் இருந்து பசுக்களை மேய்ப்போன்
கதியாய்க் கிடக்கக் களிப்பு….(14)

களிப்பில் திளைத்துக் களைத்துச் சலித்துப்
புளிக்கும் பழமாம்இப் பூமி -ஒளித்த
நிலத்தை வராகமாய் நெம்பிய ஆயர்
குலத்தோனின் கால்கண்கை கூப்பு….(15)

——————————————————————————————–

படங்களுக்கு நன்றி :

http://kamadenu.blogspot.in/2005_06_01_archive.html

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on "திருமால் திருப்புகழ் (81)"

  1. கிரேசி மோகன் ஐயாவுக்கு,

    வணக்கம். தற்பொழுது தான் உங்களின் இந்த கண்ணன் வெண்பாவைப் படிக்க ஆரம்பித்தேன்… படிக்க படிக்க மேலும் படிக்கத் தூண்டும் நடை…

    //இருப்பதிங்(கு) ஒன்றே இதன்பேர் கண்ணன்
    மறுப்பதை விட்டென் மனமே -கருப்பொருளைப்
    பார்க்காத போதும் பாடப் பரவசத்தில்
    கார்கால மேகத்தில் காண்….//

    இப்பாடலில், “இதன்பேர் கண்ணன்” என்னுமிடத்திலும், “போதும் பாடப்” என்னுமிடத்திலும் தளைதட்டலுடன் பாடல் அமைந்திருக்கிறது. சரி செய்தால் சிறப்பாக அமையும்.

    மேலும்,

    //திறவாசொர் கத்தாள் அது//

    என்னுமிடத்து “திறவாசொர்க் கத்தாள் அது” என அமைந்தால் சிறப்பாக அமையும் என்பது எனது மனத்தின்கண் எழும் எண்ணம். 

    உங்களின் எழுத்துகளின் இரசிகனாய்,
    பிரசாத் வேணுகோபால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.