திருமால் திருப்புகழ் (81)
கிரேசி மோகன்

கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
————————————————————
’’கண்ணன் அந்தாதி’’
———————————–

Keshav
இருப்பதிங்(கு) ஒன்றே இதன்பேர் கண்ணன்
மறுப்பதை விட்டென் மனமே -கருப்பொருளைப்
பார்க்காத போதும் பாடப் பரவசத்தில்
கார்கால மேகத்தில் காண்….(11)
காணவனைக் காற்றில் கலந்துவரும் கீதத்தில்
நானென(து) இல்லாத மோனத்தில் -தேனளவு
பார்க்கும் மலர்வண்டின் போக்கில் இனப்பெருக்கம்
கோர்க்கும் குயுக்தியின் கண்….(12)
கன்னங் கருத்தது காரிருள் போன்றது
நண்ணும் நமக்கொளி நாளது -முன்னம்
பிறக்காது பின்னர் இறக்காதாம் இன்னும்
திறவாசொர் கத்தாள் அது….(13)
அதனால் இதுவாய் இதனால் அதுவாய்
மதனால் மயங்கும் மனமே -முதலாம்
பதியாய் இருந்து பசுக்களை மேய்ப்போன்
கதியாய்க் கிடக்கக் களிப்பு….(14)
களிப்பில் திளைத்துக் களைத்துச் சலித்துப்
புளிக்கும் பழமாம்இப் பூமி -ஒளித்த
நிலத்தை வராகமாய் நெம்பிய ஆயர்
குலத்தோனின் கால்கண்கை கூப்பு….(15)
——————————————————————————————–
படங்களுக்கு நன்றி :
http://kamadenu.blogspot.in/2005_06_01_archive.html
கிரேசி மோகன் ஐயாவுக்கு,
வணக்கம். தற்பொழுது தான் உங்களின் இந்த கண்ணன் வெண்பாவைப் படிக்க ஆரம்பித்தேன்… படிக்க படிக்க மேலும் படிக்கத் தூண்டும் நடை…
//இருப்பதிங்(கு) ஒன்றே இதன்பேர் கண்ணன்
மறுப்பதை விட்டென் மனமே -கருப்பொருளைப்
பார்க்காத போதும் பாடப் பரவசத்தில்
கார்கால மேகத்தில் காண்….//
இப்பாடலில், “இதன்பேர் கண்ணன்” என்னுமிடத்திலும், “போதும் பாடப்” என்னுமிடத்திலும் தளைதட்டலுடன் பாடல் அமைந்திருக்கிறது. சரி செய்தால் சிறப்பாக அமையும்.
மேலும்,
//திறவாசொர் கத்தாள் அது//
என்னுமிடத்து “திறவாசொர்க் கத்தாள் அது” என அமைந்தால் சிறப்பாக அமையும் என்பது எனது மனத்தின்கண் எழும் எண்ணம்.
உங்களின் எழுத்துகளின் இரசிகனாய்,
பிரசாத் வேணுகோபால்