சிறுகை அளாவிய கூழ் ( 23)
-இவள் பாரதி
நட்சத்திரப் பூக்களைக்
கைநீட்டிப் பறிக்க
ஆசைப்படும் குழந்தையிடம்
கைக்கெட்டும் தூரத்தில்
மலர்ந்திருக்கும்
முல்லைப் பூக்களைக்
கொய்யக் கற்றுத்தருகிறேன்!
அல்லி இதழில் ஒன்று
உன் கையில் ஒட்ட
அந்த ஓரிதழை வாயில் வைத்துச்
சவைத்துத் துப்புகிறாய்…
கொய்தபோது கீழே விழுந்த
ஒன்றிரண்டு பூக்கள்
நட்சத்திரங்களாகத் தெரிய
இப்போது இடுப்பிலிருந்து
நழுவிக் கீழிறிங்க முனைகிறாய்!
நட்சத்திரப்பூக்கள் காற்றில்
மெதுமெதுவாய் நகர்கின்றன…
அதன்பின்னே நீயும் தத்த
உன் பின்னே நானும்!
நட்சத்திர பூக்கள்
காற்றில் மெதுவாய் பறக்க
அதை கொய்ய முழு நிலவாம் நீ தத்த
பரந்த வானமாய் உங்கள் பின்னே நானும்