திருமால் திருப்புகழ் (102)
கிரேசி மோகன்
கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
————————————————————-
’’கண்ணன் வெண்பாக்கள்’’
——————————————–
பல்லில்லா பாலகன், என்றெண்ணி பூதனை,
கொல்லவந்த கண்ணனைக் கண்டதும், -இல்லம்,
புகுந்து முலைதிணித்துப், பார்த்திட வாயில்,
முகுந்தனுக்கு முப்பத்தி ரெண்டு….(119)
பள்ள மதைநோக்கிப், பாய்கின்ற வெள்ளமென,
கொள்ளிடத் தானிருகால் கொள்கையாய், -உள்ளமே,
கள்ளமில்லா நம்பிக்கை, கண்மூடக் கும்பிடு,
வள்ளலென மாறும்காண் வாழ்வு….(120)
———————————————————————————————————————
நரஸிம்ஹ மந்த்ரராஜம்
—————————–
உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம் |
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யும்ருத்யும் நமாம்யஹம் ||
மேலே கூறிய ஸ்லோகத்தின் வெண்பாவாக்கம்….
————————————————————————————–
வீரியன், வீரன், வியாபகன், சைதன்ய
சூரியன், சூக்கும காரியன், -கூரிய
சிங்கன், எதிரிக்கு சொப்பனம், காலகாலன்,
மங்களம் சேர்த்திடும் மால்….(121)
ஏன வடிவெடுத்து, ஏந்தி உலகெடுத்து,
தீனர்க்(கு) அருள்புரிந்த தெய்வமே, -வான
வராகா பிணிகள், வருமுன் தடுத்து,
வராதுகா வைகுந்தா வா….(122)
வளைத்தாள் புருவத்தை, வைதேகி வில்லாய்,
வளைத்தான் சிவதனுசை ராமன், – முளைத்த,
முகச்சிகை கோதி, முனிவன் குளிர்ந்தான்,
இகத்தில் பரத்தை இணைத்து….(123)
————————————————————————————————————————
படங்களுக்கு நன்றி:
http://bhagavatham.blogspot.in/