கிரேசி மோகன்

 Bhagavatha: Putana  Keshav
Bhagavatha: Putana Keshav

கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
————————————————————-
’’கண்ணன் வெண்பாக்கள்’’
——————————————–

Krishna 04

பல்லில்லா பாலகன், என்றெண்ணி பூதனை,
கொல்லவந்த கண்ணனைக் கண்டதும், -இல்லம்,
புகுந்து முலைதிணித்துப், பார்த்திட வாயில்,
முகுந்தனுக்கு முப்பத்தி ரெண்டு….(119)

 
பள்ள மதைநோக்கிப், பாய்கின்ற வெள்ளமென,
கொள்ளிடத் தானிருகால் கொள்கையாய், -உள்ளமே,
கள்ளமில்லா நம்பிக்கை, கண்மூடக் கும்பிடு,
வள்ளலென மாறும்காண் வாழ்வு….(120)
———————————————————————————————————————
நரஸிம்ஹ மந்த்ரராஜம்
—————————–
உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம் |
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யும்ருத்யும் நமாம்யஹம் ||
மேலே கூறிய ஸ்லோகத்தின் வெண்பாவாக்கம்….
————————————————————————————–

 

 

Yagna - Varaha - Keshav
Yagna – Varaha – Keshav

வீரியன், வீரன், வியாபகன், சைதன்ய

சூரியன், சூக்கும காரியன், -கூரிய
சிங்கன், எதிரிக்கு சொப்பனம், காலகாலன்,
மங்களம் சேர்த்திடும் மால்….(121)

ஏன வடிவெடுத்து, ஏந்தி உலகெடுத்து,
தீனர்க்(கு) அருள்புரிந்த தெய்வமே, -வான
வராகா பிணிகள், வருமுன் தடுத்து,
வராதுகா வைகுந்தா வா….(122)

வளைத்தாள் புருவத்தை, வைதேகி வில்லாய்,
வளைத்தான் சிவதனுசை ராமன், – முளைத்த,
முகச்சிகை கோதி, முனிவன் குளிர்ந்தான்,
இகத்தில் பரத்தை இணைத்து….(123)

————————————————————————————————————————

 படங்களுக்கு நன்றி:

http://bhagavatham.blogspot.in/

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *