திருமால் திருப்புகழ் (113)
கிரேசி மோகன்

கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
————————————————————–
’’கண்ணன் வெண்பாக்கள்’’
———————————————-
ஸ்ரீரங்கநாதரைப் பற்றி
————————————————

நாரா யணாவுந்தன், பேரா யிரம்கூறி,
ஆரா தனைசெய்(து), அறிகிலேன், -போறாத,
வேளையில் கூப்பிட்டால், தோளைக் குலுக்காதே,
காளையே கன்றெனைக் கா….(192)
சூடிக் கொடுத்தவளை, நாடிக் கரம்பிடித்து,
ஜோடிப் பொருத்தமான சீரங்கா, -பாடித்,
தொடுத்திடுவேன் வெண்பா, தமிழாய்நீ என்பால்,
கொடுத்திடுவாய் கார்முகிலாகா….(193)
அடைக்கலம், நேசம், அரவணைப்பு, பாசம்,
கடைவிரித்தக் காட்சியாய்க் காதல், -நடைபிணமாய்,
காரங்க வண்ணன், கழல்கண்டு சேவிக்க,
சீரங்கம் சென்றோர்க்கு சீர்….(194)
பாம்புல பட்டுப், படுக்கை விரிச்சதுல,
சோம்பலா தூங்குற சொஸ்த்தமா, -ஆம்புள,
சிங்கமே அன்னிக்கு, சின்னபய சொன்னதுக்கு,
எங்கிருந்தோ வந்த(து) எவரு….(195)
நாதா திருவரங்க, நாதா தரணிகுரு,
நாதா ரமாப்பிராண நாதாவி, -னோதா,
துயறருக்கும் பாதாம், புயம்மறந்தேன் தீதாம்,
மயர்வறுக்க நீதான் மருந்து….(196)
பொன்னையும், பூமியையும், முன்னை மணக்கையில்,
திண்ணமாய்க் கட்டினாய்த் தாலியை, -தன்னையே,
தாலியாக்கி உன்னைத், தழுவி மணந்துனக்கு,
வேலியான பொன்னியுன் வாழ்வு….(197)
———————————————————————————————————-
படங்களுக்கு நன்றி :
http://bhagavatham.blogspot.in/
