திருமால் திருப்புகழ் (116)
கிரேசி மோகன்

கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
————————————————————
‘’கண்ணன் வெண்பாக்கள்’’
——————————————————-
பாரேழை உண்டுமிழ்ந்து, பள்ளிகொண்ட பாலகனே,
பாரேழை எந்தன் பரிதவிப்பை, -பேரேழாய்,
மாமன்கை எட்டாது, ஜாமம்போய் எட்டானோய்,
காமமப்பேய் கொல்லும்முன் கொள்….(210)
மூப்பும் பிணியும், முகமன் உரைத்திடும்,
தோற்பும் பகையும் திரண்டெழும், -காப்பாய்,
மருதம் முறித்து, மதயானை கொன்ற,
வரதனை நெஞ்சே வணங்கு….(211)
பெண்பால் புணர்ச்சியாய், வெண்பா வடிவத்தில்,
என்பால் எழுந்தருளும் எம்பிரானே, -உன்போல்,
பொழுதை கழிக்க, புவியிலில்லை தெய்வம்,
தொழுது கிடப்பதே தொண்டு….(212)
ஆழ்வாரி தன்னில், அனந்த சயனத்தில்,
ஆழ்வாரே ஆண்டாளின் அப்பாவாம், -ஆழ்வாரின்,
பாடல் அழகால், பெருமை அடைந்தவனே,
கூடல் அழகனே காப்பு….(213)
ஆனைவா வென்றைக்க, ஆழியுடன் வந்தானை,
ஆனைவாய் உண்டுமிழ்ந்த ஆழியானை, -ஆணைவாய்ச்,
சங்கூதி பாரதம், செய்தானை பள்ளிகொள்ளும்,
பொங்கோத ஆழியானைப் போற்று….(214)
தீபாவளி EVE பாமா துணை
————————————————-
நமக்குள் இருக்கும், நரகா சுரனார்,
இமைக்கும் பொழுதில் இறக்க, -சமர்த்தன்,
யதுகுலக் கண்ணன், இணைசகி பாமா,
உதவிக்கு உண்டு உனக்கு…(215)
————————————————————————————————————–