திருமால் திருப்புகழ் (148)
கிரேசி மோகன்
“கரமொடு களவாய் பிடிபட உனதாய்
உரலிட இழுதா மோதரனே
மரமதை சாய்த்தனை மருதிடை வாய்த்தவர்
மறுவுல கேத்திடும் ஆதரவே
புரிவிஷ மத்தினில் முடிவில்ந லத்தினை
வெளியுற வைத்திடும் யவ்வனனே
சரியென தப்பென அறியும்ம னத்தினை
அரிகழல் வைத்தறு வெவ்வினையே”….(11)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….
“மகளிர்உ டுப்பினை மறைவிளோ ளித்தனை
பிறகுஅ ளித்திடும் திட்டமொடு
துகிலுரி துட்டனை தளர்வுற கொட்டினை
துருபதைக் எட்டிட பட்டதனை
புகுவிட பூதனை விடவுடல் வேதனை
முலையுறி மாமது சூதனனே
புகுகருங் காளியுன் பிறவியைக் கோளிட
வ்ரஜநிலம் ஏளிய சோதரனே….(12)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….
படங்களுக்கு நன்றி:
http://bhagavatham.blogspot.in/