எல்லா இடத்திலும் உயிர்
தாங்கும் மரத்தில்
தூங்கும் ஆந்தையில்
கழுத்து நோக நிற்கும் பறவையில்
கனம் தாங்காத புல்லில்
அந்த நீரின் ஓட்டத்தில்
குதிக்கும் அலையின் ஆட்டத்தில்
மிதிபடும் மணலில்
மற்றும் என் மூச்சில்
இந்தப் பிரபஞ்ச இயக்கத்தில்
எல்லாம் ஒரே உயிர்
உயிர்த்துக்கொண்டே மரிக்கும்
பிறந்தோர் பயணிப்பர்
திசை எல்லாம் ஒன்றே!
நான் சென்னை வாசி . ஆனால் வாசிப்பதில்லை . தொலை காட்சி தான் வாழ்க்கை . படித்தது பட்டம் . எல்லாம் மறந்து விட்டது .
வயது அம்பத்து நான்கு . சு ரவி வாழ்ந்த மயிலை எனக்கு மூச்சு . கிரேசி மோகன் வாழும் மந்தவெளி எனக்கு சிந்து வெளி .
சொந்தமாய் தொழில் . போட்டியான வாழ்க்கை . சிவாஜி பிடிக்கும் . மெல்லிசை மன்னர் என்றால் உயிர் . சுஜாதா எனக்கு பக்கத்து தெரு . பாலகுமாரன் கூப்பிடு தூரத்தில் . மணமானவன் . மனைவி தனியார் நிறுவனத்தில் பணி . விளக்கேற்றுவது நான் தான் ஒரு மகன் . கல்லூரியில் . கர்நாடக சங்கீதம் பயின்று கச்சேரியும் செய்து வருகிறான் .எழுத்து எனக்கு பிடிக்கும் .