கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
கிரேசி மோகன்
“கையேந்தி நிற்போர்க்கு, காவல்பூ னையவன்வெண்,
ணையேந்தி ஊட்டும் நவநீதன், -மையேந்தும்,
ஆய்ச்சியர் கண்ணிமைபோல், காக்கின்ற கண்ணனின்,
தாய்ச்சிறகுள் சிக்கென்று தூங்கு”….கிரேசி மோகன்….
“மாமணக் கூந்தலாள், மாற்றான்தாய் முன்னமவன்,
வாமனனாய் வந்து வளர்ந்ததை, -ஸ்யாமளன்,
காட்டுகின்ற சாக்கிட்டு, காலால் உறிப்பானை,
போட்டுடைக்கப் பார்க்கிறானென் பேன்”….
“என்னதவம் செய்தாய், யசோதை குமாரனே,
வண்ணமுற கேசவ் வரைவதற்கு; -மன்னவனே,
கோவிலுக்கு லீவுவிட்டு, கேசவ்இல்ல வாயிலின்,
காவலுக்கு கண்ணா கிளம்பு”….கிரேசி மோகன்….


