இசைக்கவி ரமணன்

தாமரைக் கண்ணாள்…

(நேற்று மதியம். வேலை. அயர்வு. கொஞ்சம் காற்று தேவைப்பட்டது. இலக்கின்றிச் சற்றே ஊர்சுற்றப் போனேன். ஒரு முண்டகக் கண்ணி ஆலயம் அழைத்தது. முகமே மொத்த உருவமாக, அகன்ற கமலக் கண்களே முகமாக அமர்ந்திருக்கும் அவள் எதிரே சற்று அமர்ந்தேன், உயிரில் ஓர் ஆசுவாசம் நேர்ந்தது)

470

 

தாமரைக் கண்ணியின் முன்னிலையில்1545644a-6cc1-4b2c-8b67-9ce52cb2b54a_S_secvpf

தவழும் குழந்தை போலுள்ளேன்

நான்மறை போற்றும் நாயகியை

நாவில் அமர்ந்து மொழிபவளை

ஒமெனச் சொல்லி உயிர்முனையில்

உணர்வை நிறுத்திச் சுடர்பவளை

நாமம் உருவம் அருவமெலாம்

நடத்தும் விழிகளில் நான் கரைந்தேன்!

 

ஒளியின் ஊற்றே இவள்விழியோ?amman

உயிருக் குயிர்தரும் சாமரமோ?

களியின் வசந்தக் கதவுகளோ?

கருணைக் கடலின் கரையலையோ?

தெளிவே அருளத் திறந்தவிழி

தேவையைத் தீபமாய் ஏற்றும்விழி

அளித்து மகிழவே அகன்ற விழி

அமிழ்தின் வழியதைப் பணிகின்றேன்!

 
காணக் காண வினைகளெலாம்eb608269-8b12-4845-8268-b62b2a8b2cd6_S_secvpf

காடு காடாய் எரியுதடா!

பேணப் பேணச் சிறியமனம்

பெருவெள் ளத்தில் புரளுதடா!

பூண இயலாப் பூரணத்தில்

பொருந்திக் கரைந்து போவென்றே

ஆணை யிட்டே ஈர்க்கின்ற

அழகு விழிகளைப் பணிகின்றேன்!

 

விரிந்த விழிகளின் பொன்னொளியில்amma

வீழ்ந்து மறைவதே வெற்றியடா!

தெரிந் தழைக்கும் தெய்வத்தின்

திசையில் கிடத்தல் முக்தியடா!

பரிந்து நமையே பார்ப்பவளைப்

பார்த்து வாழ்வதே பக்தியடா!

சரிந்த கணத்தினில் சந்தித்த

சக்தியின் விழிகளைப் பணிகின்றேன்!

 

எங்கோ எதற்கோ திரிந்தவன் முன்durga_face

எதேச்சையாக எதிர்ப்பட்டாள்

தங்க இடமின்றித் தவித்தவனைத்

தழுவி முகந்து மடிவைத்தாள்

சிங்க முதுகில் நின்றபடி

சிரித்துப் பிடரி சிலுப்புமென்

தங்க மனதுத் தாயவளின்

தாமரைக் கண்களைப் பணிகின்றேன்!

 

 

 

07.09.2014 / ஞாயிறு

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *