கொடு இறைவா!
புவன் கணேஷ்
தோல்வி கண்டு துவளா மனம்,
துன்பம் கண்டு தளரா உறுதி,
ஏழ்மை கண்டு உருகும் உள்ளம்,
என்றும் உழைக்கும் எண்ணம்…
இவற்றைக் கொடு.
அன்பு காணா இதயத்திற்கு
அன்பு காட்டவும்,
பாசம் காணா குழந்தையின்
பா¢தவிப்பை அகற்றவும்,
ஏழ்மையில் அழும் உள்ளத்தை
உச்சி முகரவும்
எனக்குக் கற்றுக் கொடு.
மீண்டும் மீண்டும்
உதவும் எண்ணம்,
என்றும் ஊற்றெடுக்கும்
உலராத மனம் கொடு.
வற்றாத செல்வ வரத்திற்கு
வழி செய் – அதே போல்
தேவைக்கு மிஞ்சியது
தேவையுள்ளவரை அடைய
என் மனப் பாத்திரத்தில்
ஓட்டையும் விட்டு வை!
உண்மைத் தேவை உள்ளவர்,
உதவியற்றவர் – போன்றோர்
என் கண் முன் வர
கருணை செய்.
மணற் கேணியாய்
என் மனத்துள் – என்றும் வற்றாது
இரக்கம் சுரக்க, என் மீது
இரக்கம் வை, இறைவா!
I Read Mr.Bhuvan Ganesh, hope this new writer got a good and wonderful career in tamil literature !!!! may almighty shower happiness in his life!!!
Thank you very much!