கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
கிரேசி மோகன்
“ஏனிந்த எக்காளம் யாதவக் கண்ணனுக்கு
தானந்த தற்பரம் தானென்ற -ஆனந்த
ஞானம் பிறந்ததோ ! நான்யார் பயின்றதில்!;
வேணும்கட் டிக்கு வேணு”….கிரேசி மோகன்…
(OR)
ஞானம் பிறந்ததோ ! நான்யார் பயிற்சியால்!;
சோணை ரமண சுகம்”….
****ஆதிமுலமே ஆயினும் அவனியில் அவதரித்து விட்டால் ஆதிதன் முலத்தை மறக்கும் அஞ்ஞானம் தவிர்க்க முடியாது போலிருக்கிறது…அது அகல அருணை ரமணர் அருளிய வழி “நான் யார்” (WHO AM I) விசாரணை…நம்மைப் போலவே நவநீதனும் நான் யார் விசாரணை செய்து நனி ஆனந்தம் கொண்டு நர்த்தனம் ஆடுகிறான் போலும்….
“பூந்துழாய் பிய்ய , பசுங்கன்று பாய்ந்தோட
தீந்தமிழ் ஆண்டாள் திருப்பாவை -ஏந்திய
காதினால் வந்ததே கோதையின் மீதுற்ற
காதலாம் கண்ணனுக்குக் காண்”….கிரேசி மோகன்….
காதலுக்கு கண்ணு கிடையாது….கண்ணன் ஆண்டாள் மீது கொண்ட
காதலுக்கு காது கிடையணும்….LOVE IS BLIND but KRISHNA’S LOVE IS SOUND….