வனத்தினிலே …….
இசைக்கவி ரமணன்
[mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B2/[/mixcloud]
வனத்தினிலே முள்ளும் மலரும்
வழியினிலே தென்றலும் புயலும்
வாழ்வினிலே இன்பமும் துன்பமும்
வழக்கமன்றோ கண்ணே! இதை
மறந்துவிட்டால் மனதில் என்றும்
மயக்கம்தான் கண்ணே!
கலக்கங்கள் நிலைப்பதுமில்லை
உறக்கங்கள் நிரந்தரமில்லை
கடல்மீது அமைதியுமில்லை
அதன்மடியில் சலனமுமில்லை
பழக்கம்தான் குழப்பம் என்றால்
பழக்கம்தான் ஞானமும் அன்றோ?
நிலையில்லா வாழ்வில் இங்கே
நிலையானது ஏதும் இல்லை
உண்டென்றால் ஒன்றே ஒன்று
ஊ/றிவரும் உயிரின் அன்பு!
உன்னுயிரை அன்பில் செய்தான்
உன்மனதைக் கருணையில் நெய்தான்
என்னையவன் எதில்செய்தானோ? இதை
என்றும் காணும் விழியைத் தந்தான்
அருகினிலோ தொலைவில் நின்றோ
அன்பே உனைப் பாடி மகிழ்வேன்
அரைநொடி நீ உனைமறந்தாலும்
அனுமதிக்க மாட்டேன் மாட்டேன்
கண்ணே நீ உன்னை என்றும்
கைவிடாமல் உன்னைக் காப்பேன்
எதுவந்தும் எது போனாலும்
பதறாமல் நின்றே வாழ்வாய்
நேசம்தான் ஞானம் கண்ணே
ஈசனுக்கும் மறுபெயர் அன்பே!
பாடலிலே பாதை விரித்தேன்
பனிமலராய்க் கவிதை தெளித்தேன்
பாதங்களை ஏந்தி ஏந்திப்
பயணமெல்லாம் துணையாய் வருவேன்…