மலர் சபா

மதுரைக் காண்டம் – 03: புறஞ்சேரி இறுத்த காதை

மாதவியின் முடங்கலைப் பார்த்துக் கோவலன் உண்மை உணர்தல்

அதன் பின் கௌசிகன்
கோவலனைப் பிரிந்து வருந்துதலால்
அழிவைத் தரும் நெஞ்சத்தையும்
நிறைந்த காம நோயை உடையவளுமாகிய   sankailakkiyam
பூங்கொடி போன்ற மாதவியின் மடலைக்
கோவலனிடம் கொடுத்தான்.

தாம் அவளுடன் கூடி வாழ்ந்த காலத்தில்
அவள் கூந்தலில் இட்ட புனுகு நெய்யின் மணத்தை
அம்மடலின் மீது இருந்த
மண் இலச்சினை உணர்த்தியது.
எனவே அதைப் பிரிக்க இயலாதவனாய்
மீண்டும் மீண்டும் நுகர்ந்தான்.

பின் அதனுள் பொதிந்திருக்கும்
அவள் கருத்துகள் அறிய வேண்டி
இலச்சினை அகற்றி அதைப் பிரித்துப்
படிக்கத் தொடங்கினான்.

மடலில் எழுதியிருந்தவை:

அடிகளே! உம் திருவடிகள் இருக்கும்
திசை நோக்கி வணங்குகின்றேன்.
தெளிவில்லாத என் புன்மொழிகளைத்
தாம் கேட்டருள வேண்டும்.
குலப்பிராட்டியாம் கண்ணகியோடு
இரவோடு இரவாக யாரும் அறியாவண்ணம்
நீவிர் சென்றதற்குக் காரணம்தான் என்ன?

இதை உணராமல் என்னுள்ளம்
செயலற்றுப் போகின்றது.
இக்குழப்பத்தைப் போக்க வேண்டும்.
குற்றம் நீங்கிய அறிவுடைய மேலானவரே!
உம்மைப் போற்றுகின்றேன்!

இதற்கு நான்தான் காரணம் எனில்,
“என் சொல் குற்றமற்ற சொல்” என்று கருதி
அதைப் பொருட்படுத்தாமல் விட்டுவிட வேண்டும்.

இங்ஙனம் அவள் எழுதிய வார்த்தைகள் கண்டு
அதன் பொருள் உணர்ந்து
‘மாதவி ஒரு குற்றமும் அற்றவள்;
இது எல்லாம் எம் தீவினை போலும்’
என்றெண்ணிய கோவலன்
அம்மடலை மீண்டும் மீண்டும் வாசித்தான்.

அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 80 – 95
http://ilakkiyam.com/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1135-purancheriyirthakathai–

படத்துக்கு நன்றி:
http://www.gunathamizh.com/2011/03/what-she-said.html

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *