கிரேசி மோகன்

crazy

திருவேரகம்(சுவாமி மலை)….
————————————-
குந்திக்கால் மண்டியிட்டு கூப்பியக் கைகொண்ட
தந்தைக்கு சொன்ன தனயனை -சிந்தைக்குள்
வேராக ஊன்றி விருட்ஷமாய் நட்டிடு
ஏரகச் செல்வனை ஏத்து….

பழமுதிர்சோலை
——————–
கூப்பாடு போட்டவுடன் கும்பல் கூடிடும்
தோப்பாய் இருந்து தனிமரமாய் -மூப்பால்
கிழமுதிரும் போதேனும் கந்தன்கை கோர்க்க
பழமுதிர் சோலைக்குள் புகு….

திருத்தணி
————–
விருத்தனாய் வந்து குறத்தியைக் கூடி
திருத்தணி மேவும் தலைவா -மருத்துவன்
வைதீஸ் வரன்பெற்ற வேலா யுதாவாழ்வில்
பொய்தீசல் சேராது போக்கு….

திருச்செந்தூர்
——————-
மாறுபடு சூரனுடல் வேறுபட வேலெய்து
கூறுபட வைத்த குருநாதா -சீறுகடல்
செந்தூரில் பத்தினிகள் சேர வளர்ந்திடும்
சிந்தூர வண்ணனைச் சேர்….

பழனி
——–
மாம்பழம் தந்தை மறுத்ததால் கோபித்து
தீம்பிழம் பாகி தவக்கோலம் -நாம்பழனி
குன்றினில் கண்டு களித்திட காட்சிதரும்
நின்றிடும் ஆண்டி நமக்கு….

திருப்பரங்குன்றம்
———————–
குரங்கென்ற நெஞ்சோடு கூடிக் குலாவி
தரங்குன்றி தாழ்ந்தோம், தவித்தோம் -பரங்குன்றில்
தெய்வானை கைப்பிடித்த தேவ சகாயனை
கைவாய்மெய் கொண்டு கருது….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “அறுபடையோன் புகழ்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *