இயங்கும் சிந்தனையின் எதிர்கோணம்

1

மதுமிதா


இழுத்து சாய்த்துக் கொண்டாய்

மார்பில் மனம் நிறைந்திட

கோபம் வீசியெறிந்த தருணத்தின்

வேற்று முகத்தை மறந்திட

மருகிச்சாய்கிறேன் உன் மடியில்

அன்பை மட்டும் உணரவேண்டும்

முகம் பார்க்கும் மறுபொழுதிலென

விழிமூடி உலகை மறக்க யத்தனிக்கையில்

மூடிய விழி திறந்து

பார்க்கச் சொல்கிறாய்

மலர்ந்த உன் வதனத்தில் பிரகாசிக்கும்

அன்பின் வீச்சினைக் காண

இணைவின் நெருக்கத்தில்

இரவின் சிறு ஒளியில்

 

 

படத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இயங்கும் சிந்தனையின் எதிர்கோணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.