இயங்கும் சிந்தனையின் எதிர்கோணம்
மதுமிதா
மார்பில் மனம் நிறைந்திட
கோபம் வீசியெறிந்த தருணத்தின்
வேற்று முகத்தை மறந்திட
மருகிச்சாய்கிறேன் உன் மடியில்
அன்பை மட்டும் உணரவேண்டும்
முகம் பார்க்கும் மறுபொழுதிலென
விழிமூடி உலகை மறக்க யத்தனிக்கையில்
மூடிய விழி திறந்து
பார்க்கச் சொல்கிறாய்
மலர்ந்த உன் வதனத்தில் பிரகாசிக்கும்
அன்பின் வீச்சினைக் காண
இணைவின் நெருக்கத்தில்
இரவின் சிறு ஒளியில்
சுவையான கவிதை.