மலரும் நினைவுகள்
கிரேசி மோகன்
எனக்கு அப்போது 18 வயசு இருக்கும்….என் தாத்தா வெங்கடகிருஷ்ணையங்கார் பரம ராஜாஜி பக்தர்….’’கிணத்துல குதி’’ என்று ராஜாஜி சொன்னால் குதித்து விடுவார்….’’சுதந்திரா தாத்தா’’ என்று மைலாப்பூரில் பிரபலமான அவர், சுதந்திரா பார்ட்டி என்ற கிணற்றுத் தவளையாய் வாழ்ந்தார்….எனக்கு அப்போதெல்லம் எழுத்தை விட ஓவியத்தில் ஆர்வம் அதிகம்….எனது எழுத்தையும், ஓவியத்தையும் ஊக்குவித்தவர் என் தாத்தா(மை LOVEவாப் பூர் டைம்ஸ்ஸில் விவரமாக எழுதுகிறேன்)…..என் தாத்தா மூதறிஞரின் ஆட்டிகிராஃப் வாங்கி தருவதாகச் சொன்னதும் ‘’ராஜாஜியை’’ வரைந்தேன்….அன்னாரும் ஒரு நாள் மாலை 4மணிக்கு அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்தார்….நான், தாத்தா, மற்றும் சில சுதந்திரா பார்ட்டி உறுப்பினர்கள் ராஜாஜி வீட்டிற்கு 2மணிக்கெ கிளம்பினோம்….போகும் வழியில் ‘’சாந்தி விஹாரில்’’ மசாலா தோசை ஆர்டர் செய்து சாப்பிட்டதில் காலதாமதம் ஆகியது….ராஜாஜி வீட்டுக்கு(பசுல்லா ரோட் என்று நினைவு) நாங்கள் சென்றபோது மணி 4.02 ஆகிவிட்டது….2 செகெண்ட்தான் தாமதம்….ராஜாஜியின் காரியதரிசி வந்து ‘’சொன்ன நேரத்தில் வராததால் சார் உங்களை அப்புறம் வரச்சொல்லி விட்டார்’’ என்றார்….இத்தனைக்கும் ‘’ராஜாஜி’’ ஜன்னல் வழியாகத் தெரிந்தார்….RAJAAJI Thy Name Is Punctuality….Uncompromising Personality….காரியதரிசி சொன்ன அப்புறம் வரவேயில்லை….கையெழுத்து போட ராஜாஜியும் இப்போ இல்லை….வாங்கித்தர என் தாத்தாவும் இல்லை….ஓவியத்தில் ஆசை தீர ர.மோகன் என்று போட்டுக் கொண்டேன்….ஓவியத்தை இணைத்துள்ளேன்….கிரேசி மோகன்….