சாந்தி மாரியப்பன்

ஆழ்நிலைக்கனவுகளொன்றில்

பிடிமானத்துக்காய்

துழாவிய கைகளில்

சிக்காது விளையாடுகின்றன;

எப்போதோ

நினைவடுக்ககத்தில் சேமிக்கப்பட்டிருந்த

பத்திரமாய் அடைகாக்கப்பட்டிருக்கும்

நினைவுகள்,

பெருங்கனவின் தணியாவெப்பத்தில்

காலாவதியாகுமுன்

காலம் நகர்த்திச்சென்ற

படகொன்றில்

துடுப்பசைத்துச்செல்கின்றன

தன்னையள்ளிக்கொள்ளும் இலக்கு தேடி..

படத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *