மலர் சபா
மதுரைக் காண்டம் – 04. ஊர் காண் காதை

amalar

சிவந்த இலவம் போன்ற இதழ்களால்
இளமுத்துப் பற்கள் தெரியச் சிரிப்பர்.
ஊடியிருந்த காலத்தில்
கூறாமல் விட்ட மொழிகளையெல்லாம்
நீலோறபவம் போன்ற
கண்களையுடைய மகளிர்,
நெஞ்சில் உள்ள வார்த்தைகளுக்கு
எழுத்துருவம் கொடுத்து
இப்போது மயக்கத்துடன்
குழறிக் குழறிப் பேசுவர்.

காண்பவர் எல்லாம் சிரிக்கும் வண்ணம்
அக்காட்சி அமைந்திருந்தது.
அழகிய செங்கழுநீர்ப்பூ போன்ற
கயலை ஒத்திருக்கும் சிவந்த நீண்ட கண்கள்
தம் கடைப்பகுதி திறந்து பூசலுடன் நிற்க
கொல்கின்ற வில் போன்ற
புருவங்களின் வளைவுகள்
உள்நோக்கி வளைந்திருக்க

திலகம் அணிந்த சின்ன நெற்றியில்
அரும்பிய வியர்வையுடன்
தாம் கொண்டுள்ள ஊடல்
தீரும் வேளையை எதிர்பார்த்து,
செழுமையான குடியில் பிறந்த
செல்வந்தர்கள் மட்டுமின்றி
வையத்தைக் காத்து நிற்கும் அரசர்களும்
விரும்பி நிற்கும் சிறப்புக்கொண்ட
காமக்கிழத்தியர் வீதிகளைக் கண்டவாறு
சென்றான் கோவலன்.

அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 137 – 145

http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1134-oorkankathai–

படத்துக்கு நன்றி:

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *