கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
COMPULSORY EDUCATION போல COMPULSORY வாத்சல்யம்
கூடாரை வெல்லும் கோவிந்தன் தன் பாகவதம் பகவானுக்கே வெளிச்சம்….
————————————————————-
விரல்சொடுக்கிக் கன்றை வரவழைத்துக் காலில்
சரண்படுத்தும் கட்டாய சாமி -உரலிடுக்கில்
மாட்டிய போது மருதம் முறித்தன்று
காட்டினான் வாத்ஸல்யம் காண் …. கிரேசி மோகன்….
குழவியாய் மாறிக் கன்றைக்
.. கொள்கிறான் மடியில் கண்ணன்!
தழுவியே அதன்றன் தோளை,
.. தாயென வாகி நிற்பான்!
பழகிடும் பசுவைக் கண்டால்
.. பாலனாய், குழலை ஊதும்
அழகினால் அகங்க வர்ந்தே
.. அடைக்கலம் தருவன் அன்றே!