குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா …

0

— கவிஞர் காவிரிமைந்தன்.

 

m s s

rajajiதிரையிசைப் பாடல் வரிசையில் இடம்பெறாவிட்டாலும் பொற்காலப் பாடல்கள் வரிசையில் சிறப்பிடம் பெற்ற இப்பாடல் இடம்பெறவேண்டும் என்கிற வேட்கையால் இணைக்கப்படுகிறது. மூதறிஞர் ராஜாஜி அவர்களால் இயற்றப்பட்ட பாடல் என்கிற அந்தஸ்தும்… சங்கீதவானில் புகழ்க்கொடிவீசிய பாட்டரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் பாடிய வகையிலும்…

உலகில் உள்ள அனைத்து உயிர்களும் பெறவேண்டிய ஆனந்த நிலையையே பல்லவியாக்கி… மறைபொருள் நோக்கிய மகத்தான தவமாக ஊனுருக… உயிருருக… தானுருகி யாவரும் கேட்க விரும்பும் பாடலாய்… எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டு இன்புறத்தக்க பாடல்!

ஐ.நா.சபையில் திருமதி.எம்.எஸ்சுப்புலட்சுமி அவர்கள் குரலில் இடம் பெற்ற முதல் தமிழ்ப்பாடலும் இதுவே என்கிற கூடுதல் தகவல் தமிழர்கள் அனைவரும் பெறுகின்ற பெருமை!

பாடல்: ராஜாஜி
பல்லவி
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை கண்ணா
குறையொன்றுமில்லை கோவிந்தா

அனுபல்லவி
கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

சரணம் – 1
வேண்டியதைத் தந்திட வேங்கடேசம் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

ராகம் காபி
சரணம் – 2
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா – கண்ணா
உன்னை மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார் என்றாலும்
குறையொன்றும் எனக்கில்லை மறைமூர்த்தி கண்ணா என்றாலும்
குறையொன்றும் எனக்கில்லை மறைமூர்த்தி கண்ணா

சரணம் – 3
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்றாய வரதா
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

ராகம்: சிந்துபைரவி
சரணம் – 4
கலிநாளுக் கிரங்கி கல்லிலே இரங்கி
நிலையாக கோயிலில் நிற்கின்றாய் கேசவா
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா

சரணம் – 5
யாரும் மறுக்காத மலையப்பா
உன் மார்பில் ஏதும் தர நிற்கும் கருணை கடலன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா
ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.