— கே.எஸ்.சுதாகர்.

(50 வார்த்தைகளுக்குள் ஒரு குறுங்கதை)

சறிற்றிக்காக முப்பது டொலருக்கு சொக்கிளேற்றுகளை விற்க வேண்டும்.

தாயாருடன் பிரணவன் அயல் வீடுகளுக்குச் சென்றான். இரண்டு டொலர்களுடன் கவலையாக வந்தான்.

நாளை அடுத்த வீதிக்குச் செல்வோம் என்றார் அம்மா.

மறுநாள் பிரணவன் பாடசாலை சென்றதும், தாயார் அடுத்த வீதிக்குச் சென்றார். மகனிடம் சொக்கிளேற் வாங்கும்படி நாணயக்குற்றிகளை அவர்களிடம் கொடுத்தார். பலர் காசை வாங்க மறுத்து, தாங்கள் மகனுக்கு உதவுவதாகச் சொன்னார்கள்.

மாலையில் எல்லாவற்றையும் விற்று மகிழ்ச்சியில் வந்தான் மகன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *