-றியாஸ் முஹமட்

கன்னிக்கு ஏன் வேதனை…?
கருமச் சீதனத்தின் சோதனை!

கன்னிக்கோ                                                                                                                  lady
கலியாணம்
கடந்த வயது…

கலியாணச் சந்தையில்
கனவுகளோடு
காலூன்றி நிற்கும்
கற்புக் கன்னி!

கல்யாணராமர்களோ
கன பேர்,
கருமச் சீதனக்
கனவுகளோடு…

கல்யாணராமனுக்குக்
காணிக்கையில்லை,
காணிக்கை கேட்பவன்
கடவுளுமில்லை!

கரும்பு தின்னக் கூலியோ… ?
கணவனாகக் காசோலையோ…?

கண் கெட்ட,
கல்யாணக் காளையர்
காசு கொடுத்தும்

கடை, நகை, வாகனமாம்
கணக்குப் பார்க்கின்றான்
கச்சிதமாய்…!

கணக்குப் பிழையானது
கல்யாணம் விலையானது
கன்னியின் இன்பக்
கனவுகளோ கானல் நீராய்க்
கரைகிறது…….!

கலியாணச் சந்தையிலோ
காசுகளோ குவிகின்றது!
காலங்களோ கடந்தாலும்
கல்யாணராமர்களோ
கலக்குகின்றார்கள் – புதுக்
கட்டழகோடு….!

கன்னிக்கு என்ன வேதனை…
கருமச் சீதனத்தின் சோதனை!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *