-மலர் சபா

மதுரைக் காண்டம் – 05: அடைக்கலக் காதை

அந்த ஏட்டினைக் கையில் ஏந்திக் கொண்டு
கடை வீதிகளிலும்
வணிகர் வாழும் மாட மாளிகைகள் உள்ள           paarpani
வீதிகளிலும் சென்று
“தானம் செய்து என் பாவத்தைப் போக்கி
நீவிர் புண்ணியம் பெறுக” என்றே கூறிச்
சென்று கொண்டிருப்பாள் அப்பார்ப்பனப் பெண்.
நீயும் அவளைக் கூவியே அழைத்து
அவள் கையேட்டைப் பற்றியும் துன்பத்தைப் பற்றியும்
கேள்விகள் கேட்டாய்.
அவளும் தான் உற்ற துயர் உன்னிடம் சொன்னாள்.

“இந்தப் பொருள் வரும்படி எழுதிய
செய்திகளையுடைய  ஏடு இதுதான்.
இதனை வாங்கிக்கொண்டு
உம் கைப்பொருள் தந்து
எம் கடுந்துயர் நீக்குக” என்றாள்.

நீயும் அவளிடம், ‘அஞ்சாதே!
உன் கடுந்துயர் யான் போக்குவேன்.
உன் மனதில் உள்ள துயரம் நீக்குக” என்றே கூறி,
அக்கணமே வேதம் ஓதும்
அந்தணர் எழுதிய அறநூல்களில் கூறியபடி
அவள் துயரம் நீங்கும் வண்ணம்
தானங்கள் பல செய்தாய்.

கானகம் சென்ற அவள் கணவனையும்
அவளிடம் சேர்த்துச்
சுருங்காது பெருகும் செல்வமும் கொடுத்து
அவர்களை நல்வாழ்க்கைப் படுத்தினாய்.
அத்தன்மை வாய்ந்த
உன்னை விட்டு விலகாத
செல்வம் உடையவன் நீ!
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 60 – 75
http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/
pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-adaikalakathai–

படத்துக்கு நன்றி: கூகுள்

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.