நான் அறிந்த சிலம்பு – 166
-மலர் சபா
மதுரைக் காண்டம் – 05: அடைக்கலக் காதை
கவுந்தியும் மாடலனும் கோவலனுக்குக் கூறிய ஆறுதல் உரைகள்
மாதவம் செய்த கவுந்தியடிகளும்
மாமறையோன் மாடலனும்
கோவலனிடன் இவ்வாறு கூறினர்:
இங்கே இங்ஙனம் தங்கியிருப்பது
துறவறம் மேற்கொண்ட
முனிவர்களுக்கு மட்டுமேயல்லாது
இல்லறத்தில் ஈடுபட்டவர்களுக்குப் பொருந்தாது
இந்நகரில் இருக்கும் வணிகர்
உன் பெருமையறிந்து உன்னை ஏற்றுக் கொள்வர்
எனவே இவ்விடத்தை விடுத்து நீங்குக.
சூரியனின் கதிர்கள் மேற்கில் மறையும்முன்
உன் காதலி அவளோடு மதுரை நகர் புகுக.
மாதரி என்னும் ஆயர்குல முதுமகள் கவுந்தியை வணங்குதல்
அந்த நேரத்தில்
அறம் செய்வதைப் பெரிதும் விரும்புகின்ற
அறம் செய்பவர்கள் நிறைந்துள்ள
புறஞ்சேரி எனும் மூதூரில் குடிகொண்டுள்ள
பூப்போன்ற கண்களையுடைய
‘இயக்கி’ எனும் பெண் தெய்வத்திற்குப்
பால் அன்னம் படைத்துவிட்டுத்
திரும்பிக்கொண்டிருந்த
அன்பும் பண்பும் நிறைந்த
ஆயர்குல முதுமகள் மாதரி என்பவள்
கவந்தியடிகளைக் கண்டு
அவரடி தொழுது நின்றாள்.
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 107 -119
http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/
<http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-adaikalakathai–>
pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-adaikalakathai–
<http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-adaikalakathai–>
படத்துக்கு நன்றி: கூகுள்