-சுரேஜமீ​​

பிறப்பின் வ​ந்தது ​ஊ​ழெனின்​ ​ஓடிடும்​
​நிற்கத் ​திருக்குறள் சொல்வழி​ – தீர்வும்
உள​திங்கே நல்கிப் பயனுற வாழ்வின்           valluvar
நிலையோங்கி நிம்மதி காண்!​     

ஓதும் மறைபுரியார் வாழ்வின் நிறையறியார்
போதும் மனமுடைச் சிந்தையில் ஏகத்
திருக்குறள் போலொருநூல் ஏதுண்டு? – ஞாலம்
ஒருகுரலாய்ச் சிந்திக்கச் சொல்!

வெப்பம் தணிக்கக் கோடையில் நீரருவி
தெப்பம் நனைப்பதுபோல் வாழ்வின் குறைபோக்க
நுட்பம் பலதரும் மெய்நூல் – திருக்குறள்
திட்பமாய் நல்கிடப் பேறு!

ஊர்சொலக் கேளார் உறவுசொல வேண்டார்
நூல்சொலும் வாரீர் வருந்துன்பம் போக்குமோர்
வழியும் மாந்தர்க்கு மண்ணில் – திருக்குறள்
வாழிய வகையறிந்தேல் நன்கு!

வாழ்வின் முடிவுதான் தேடியலை மாந்தர்க்கு
ஊழ்வினை அறுத்து உத்தமர்செய் – வெல்லும்
திருக்குறள்  சூழும் மாற்றி நிலைதரும்
நல்வினை ஏற்றும் பார்!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *