சொர்க்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

1

— கார்த்தி ராஜூ.

நள்ளிரவு ஒரு மணி.

மெலிதான தென்றல் வீசும் பொழுது, விகாஷா வீட்டுக் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்கவே, கதவை திறந்து பார்த்தாள். யாரும் இல்லை…… கதவை மூட முற்பட்ட போது வாசலின் கிழ் ஒரு போஸ்ட் கார்டு இருந்தது . அதை குனிந்து எடுத்து கதவை சாத்திவிட்டு சோபாவினில் அமர்ந்து அதை படிக்க ஆரம்பித்தாள்…….

“சொர்க்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது !!“ என அவள் முடிக்கும் முன்பே அவள் தொண்டை பகுதி கத்திக்கு பலியாகி இருந்தது .

அங்கே அவள் வீட்டில் ரத்தகரை படிந்த “அந்த” கைகள் தன்னை தண்ணீரில் சுத்தப்படுத்தி கொண்டிருந்தன !!!

……………………………………………………………………………………………………………………………………………………..

மறுநாள் மாலை …

”அப்பா என்னோட தொப்பிய பாத்திங்களா அப்பா ??“ என்றான் வருண்.

“ஹாஹாஹா…. ஏன்டா … இன்ஸ்பெக்டர், நீயே உன் தொப்பி காணோம்னு கம்ப்ளைன்ட் பண்ணு … போ …” என சிரித்தார் வைத்யநாதன்.

“ம்ம்ம்ம்… கிடைச்சிருச்சி…அப்பா …. டிவிய ஆன் பண்ணுங்க ….”

“பிரபல செய்தி வாசிப்பாளர் விகாஷா தன்னுடைய வீட்டில் மர்மமாக கொலை செய்யப்பட்டார்“

“ஒ மை காட் !! …..என்னப்பா இது ??…..” என்றான் வருண்.

“எனக்கும் தெரிலப்பா …. நீ ஏதோ ஈவ்னிங் மீட்டிங்குக்கு அவசரமா போகணும்னு சொன்னியே ….??”

“ஆமாப்பா…. மறந்துட்டேன் … நான் கிளம்புறேன்.”

அடுத்த நிமிடம் தனது அப்பாச்சி வண்டியில் பறந்தான் வருண். ஐந்து வருடங்களுக்கு முன்பு தான் வருண் இன்ஸ்பெக்டர் ஆனான். இளமை வயதிற்கேற்ப அந்த மிடுக்கும் துடுக்கும் எப்போதும் அவனிடம் இருக்கும். வண்டி நேராக பெசென்ட் நகரில் உள்ள ஒரு காபி ஷாப்பில் நின்றது. உள்ளே பயத்துடனே தான் வாங்கி வந்த வெள்ளை ரோஜா பூச்செண்டை மறைத்து கொண்டு சென்றான்.

“ஏன் லேட்..?? னு நான் கேக்க மாட்டேன்” என்றாள் வீணா.

“சாரிடா செல்லம் … வழக்கம் போல தொப்பிய மறந்துட்டேன் … அண்ட் திஸ் இஸ் பார் யு ….” என வெள்ளை ரோஜா பூக்களை நீட்டினான் ..!

“ம்ம்ம்ம்… எதாவது பண்ணி என்னை ஈசியா கவுத்துடற…” என அழகாகச் சிரித்தாள். இரண்டு வருட காதல் அது !

“சரி வீணா … ஸ்டேஷன்ல ஒரே டென்ஷன் …சிட்டில ஃப்ரிகுவன்டா அடுத்தடுத்து சில முக்கியமான ரௌடிகள் கொலை செய்யப்பட்டுருக்காங்க…. இதுல சில முக்கியமான பிரபலங்களும் அடக்கம். அதப் பத்திதான் பேச ஏ.சி இன்னிக்கு மீட்டிங் வச்சிருக்கார்”

“ஆமா வருண் … இன்னிக்கு காலைல நியூஸ் பார்த்தியா…?? … விகாஷாவையும் கொன்னு இருக்காங்க. எனக்கு ரொம்ப பயமா இருக்கு வருண் … உனக்கு எதாவது ஆகிடுச்சினா..??” என மெல்ல விசும்பினாள்.

“ஹே…. ரிலாக்ஸ்” …. என அவள் கைகளைப் பற்றி மெதுவாக முத்தமிட்டான்…….. “எனக்கும் எதுவும் ஆகாது .. சரி நான் கெளம்புறேன், நேரம் ஆச்சி …!! அப்புறமா மீட் பண்ணலாம்” என கிளம்பினான் வருண்.

வீணா வளர்ந்து வரும் ஒரு பத்திரிக்கையாளர். மிகவும் மென்மையானவள். வருணை உண்மையாக நேசிப்பவள். அவள் அப்பா அம்மா இறந்து பல ஆண்டுகள் ஆகின்றது. தனியாக ஒரு வீட்டில் குடிபெயரும் பொழுது தான் வருண் அறிமுகமாகி காதலானது என வீணாவின் வாழ்க்கை சின்னதாக வருணுக்குள் அடங்கி விட்டது.

மாலை இரவு பொழுதாக உருமாற, ஸ்கூட்டியில் தனியாகச் சென்று கொண்டிருந்த போது ஒரு ஆள் அரவமற்ற தெருவில் ஒரு நாற்பது வயது மிக்க ஒருவன் உடம்பில் காயங்களோடு தள்ளாடி அவள் ஸ்கூட்டி முன் விழுந்தான் .

“ஒ மை காட்…!!… சார்… யார் நீங்க ?? உங்களுக்கு என்னாச்சி …??”

“சொல்றதுக்கு நேரமில்ல … சீக்கிரமா என்னை ஒரு பாதுகாப்பான இடத்துக்கு கூட்டிட்டுப் போங்க …” எனக் கெஞ்சினான் அவன்.

சற்றும் தாமதிக்காமல் வீணா அவனை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள். அவனுக்குத் தேவையான எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து முதலுதவியும் செய்து படுக்க வைத்தாள்.

……………………………………………………………………………………………………………………………………………………..

”டியர் ப்ரெண்ட்ஸ்… நான் உங்கள எதுக்கு இந்த மீட்டிங்குக்கு கூப்பிட்டு இருக்கேன்னு உங்களுக்கே தெரியும் …மொதல்ல சைனா பாஸ்கர், அப்புறம் ரியல் எஸ்டேட் ஓனர் கார்த்திகேயன், ஆட்டோ விமல்,…. நேத்து ….. விகாஷா…”

அனைவரும் ஏ சியை உன்னிப்பாக கவனித்து கொண்டிருந்தனர்.

“ரௌடிங்க சாகறது நமக்கும் பப்ளிக்கும் நல்லது தான். பட் அவங்க கூட வேற சிலரும் சாகுறாங்களே… அதுவும் இது எல்லாமே ஒரே மாதிரி சாவு அல்ல. ஒரு மர்டர், ஒரு விபத்து, ஒரு தற்கொலைனு காரணம் வித்தியாசமா இருந்தாலும் பதில் ஓரே மாதிரி தான் இருக்கு“

“அதுவும் இல்லாம கொலை பண்றவனோட ஆர்டரும் நமக்குத் தெரியல. நாளைக்கு அந்த லிஸ்ட்ல நான் இல்ல…. ஏன் நம்ம வருண் கூட இருக்கலாம்.”

வருணனுக்கு வியர்க்க ஆரம்பித்ததும் அவனின் மொபைல் போன் சிணுங்க ஆரம்பித்தது”

“எக்ஸ்க்யுஸ் மீ …..” என மீட்டிங் அறையை விட்டு வெளிய வந்தான்.

“என்ன வருண் மீட்டிங்ல இருக்க போல .. சீக்கிரமே விகாஷா கூட உன்னை அனுப்பி வைக்கிறேன் …!!” என்று கரகரகுரலில் சிரிப்புடன் ஓசை வந்தது.

“டேய் .. நீ யாருடா …” …. என கேட்கும் போது போன் கட் ஆகியது.

மீண்டும் உள்ளே வந்து “சார்… “ இஃப் யு டோன்ட் மைன்ட் … எனக்கு ஒரு அர்ஜன்ட் வொர்க் இருக்கு … அத முடிச்சிட்டு நான் சீக்கிரமா வந்துடறேன் …”

“ம்ம்ம்….டேக் யுவர் டைம்….பட்… பி சீரியஸ்…!!!” என்றார் ஏ.சி.

“தேங்க்யு சார் ..” என வேகமாகக் கிளம்பி அந்த நம்பரை ட்ரேஸ் செய்தான். அது ஒரு இறந்து போனவருடைய பெயரில் இருந்தது. திருப்பி அழைத்தாலும் “ச்விட்ச் ஆப்“ என வந்தது. வருணுக்கு ஏதும் புலப்படவில்லை. நேராக விஷாகா வீட்டிற்கு சென்றபோது அங்கே போலிஸ் பாதுகாப்பு இருந்தது. தன்னை அவர்களிடம் அடையாளப்படுத்திக் கொண்டு உள்ளே சென்ற போது, ஒரு முடியும் நிலையில் உள்ள சிகரட் துண்டு இருந்தது. சில்லென்று இருந்தது. சோதனை செய்யும் போது அதை யாரும் கவனிக்க வில்லை போலும். அதே போல் கழுத்தறுக்க பட்ட வெட்டு இடமிருந்து வலமாக இருப்பதை கவனித்த வருண் குற்றாவாளி கண்டிப்பாக இடதுகை பழக்கம் உடையவன் என யூகித்தான். அதற்கு மேல் அவனுக்கு எந்த தடையுமும் கிடைக்கவில்லை. வெளியே கிளம்பி வரும் பொழுது அங்கே ஒரு முப்பது வயது இளைஞன் போலீசிடம் பேசி கொண்டிருந்தான்.

“அடுத்த மாசம் விகாஷவ கல்யாணம் பண்ணலாம்னு இருந்தேன் சார்…! இப்படி ஆகிடுச்சே சார்…!!” என அந்த இளைஞன் அழுதான். மெதுவாக அவனை கடந்த வருண் அவன் காலடியில் வேண்டுமென்றே தன் கையிலிருந்த முழு சிகரட்டை கீழ போட்டதும் அந்த இளைஞன் தனது இடது கையால் எடுத்து வருணிடம் கொடுத்தான். மெதுவாக அவனைப் பற்றி வெளியில் விசாரித்ததில் அவன் சரியான குடிகாரன் என்றும் விஷாகாவின் மாமா மகன் என்றும் தெரியவந்தது. வெளிநாட்டில் இருக்கும் விஷாகாவின் பெற்றோருக்கு விஷயம் தெரிவிக்க பட்டது.

………………………………………………………………………………………………………………………………………………………

“இப்பவாது சொல்லுங்க… நீங்க யாரு …?? ஏன் இந்த மாதிரி அடிபட்டுச்சி ??“ என்றாள் வீணா.

“என் பேரு குமார், நான் ஒரு பிரைவேட் டிடக்டிவ் ஏஜண்ட். எனக்கு பிடிக்காதவங்க கிட்ட மாட்டிகிட்டேன் …அதான் … கொஞ்சம் தண்ணி கொடுங்க”

“இந்தாங்க குமார்”…. க்ளாசை பிடிக்கமுடியாமல் கீழ குமார் விட்ட போது சட்டேன்று அதை பிடித்தாள் வீணா. பாத்து குமார் …நீங்க ரெஸ்ட் எடுங்க……நான் போய் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.

வருணுக்கு போன் செய்தாள்.

“வருண் உன்கிட்ட சீரியசான மேட்டர் ஒன்னு சொல்லணும். சீக்கிரம் கெளம்பி என் வீட்டுக்கு வா…”

“ம்ம்ம்ம்…” பைவ் மினிட்ஸ். மெதுவாக அறைக் கதவை திறந்து குமார் என்ன செய்கிறான் எனப் பார்த்தாள் வீணா. குமார் படுக்கையில் இல்லை என்றதும் அதிர்ந்தாள். தன் பின்பக்கத்திலிருந்து சிகரட் வாசனை வரவே திரும்பி பார்த்தாள் .

“சாரி வீணா … ரொம்ப குளிருது … அதான்“

“ம்ம்ம்… பரவால்ல” என சமாளித்தாள். வெளியே இருந்து உள்ளே வருண் வரும் சத்தம் கேட்டது. உள்ளே வந்ததும் குமாரையும் வீணாவையும் பார்த்து அதிர்ச்சியானான். அதை புரிந்து கொண்ட வீணா நடந்த கதை எல்லாவற்றையும் அவனிடம் தனியாக ஒப்பித்தாள். இருப்பினும் வருணுக்கு குமார் மீது ஏதோ சந்தேகம் இருப்பது போலத் தோன்றியது.

“சரி வாங்க சாப்பிடலாம்…” என்றான் வருண்.

“இருங்க குளிச்சிட்டு வரேன் …” என்றான் குமார்.

மூன்று பெரும் டைனிங் டேபிளில் ஒருவரை ஒருவர் பார்த்த படி அமர்ந்தனர். குமாரின் ஒவ்வொரு அங்க அசைவுகளையும் வருண் கண்காணித்துக் கொண்டிருந்ததில் அந்த இடக்கை பழக்கம் மற்றும் வெள்ளை சிகரட் தப்பாமல் இருந்தது. ஆனால் இவனுக்கும் அந்த கொலை செய்யப்பட்டவர்களுக்கும் என்ன சம்பந்தம் என வருணால் யூகிக்க முடியவில்லை.

மூவரும் தனித்தனி அறையில் உறங்கினர். நேரம் நள்ளிரவை தண்டிச் செல்லும் வேளையில்… மெதுவாக வருணின் அறைக் கதவு திறக்கப்பட்டது.

“வா … இக்பால் … உனக்காகத்தான் வைட்டிங்..” என வருண் சிரித்தபோது அங்கே விளக்குகள் ஆன் செய்யபட்டிருந்தது .“இந்தா நீ செட் பண்ணி வச்சிருந்த ஒட்டு கேக்குற மைக்கு”

இக்பாலுக்கு வியர்த்தது….

“சரி … விகாஷவ கொன்ன சரி….. ஆனா ஏன்டா உங்க ஆளுங்களையும் கொன்னு இருக்க …. பெரிய புடுங்கி ஆகலாம்னா…??”

“டேய் நான் குமார் இல்ல இக்பால்னு எப்படிடா கண்டு புடிச்ச ..??”

“குளிக்கப் போனியே …. உன் முதுகல ஏதோ பச்சை குத்தி வச்சிருந்தியே … அத வச்சி தண்டா என் வெண்ணை… சரி இப்போ சொல்லு … விஷாகவ ஏன் கொன்ன …?? அதுவும் இல்லாம என்னை வேற போட வந்துருக்க…..?!”

“டேய் உன் ஆளு கூட இருந்து உன்ன வேவு பாக்கலாம் தண்டா நடிச்சி வீடுக்குள்ள வந்தேன்… இப்போ அதை நான் கேக்கணும் …எதுக்குடா எங்க பசங்கள போட்டிங்க?? எங்க அண்ணனுக்கு மட்டும் தெரிஞ்சிது……….”

“ம்ம்ம்ம் நானும் உங்க அண்ணனத் தாண்டா தேடிட்டு இருக்கேன்“ என்று அந்த அறையில் துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்தாள் வீணா.

வருணும் இக்பாலும் ஒரு நிமிடம் உறைந்து போயினர்.

“வீணா ?? என்ன இது ??”

வருண் ………. இக்பால் உன்னை வேவு பாக்க வந்தான. நீ……. எல்லா கொலையும் பண்ணது அவன்னு நெனச்சிட்டு இருக்க … அவன்….. நீ தான் பண்ணனு நினச்சிட்டு இருக்கான். ஆனா எல்லாத்தையும் பண்ணது நான் தான் !!!!”

வருணுக்கு வார்த்தைகளே வர வில்லை !!

ஒரு வருஷம் முன்னாடி ஒரு பதிமூணு வயசுப் பையன் காணோம்னு உன்கிட்ட ஒரு தம்பதி வந்தாங்க தெரியுமா …?? அவங்க என் அம்மா அப்பா…. காணாமப் போனது… என் ரெண்டாவது தம்பி … ஆனா நீ ஒரு போலீசா அலட்சியமா அதை பொருட்படுத்தாம விட்டுட்ட….. என் தம்பிய கடத்துனவங்க என் அப்பா அம்மாவையும் மொத தங்கச்சியையும் லாரி ஏத்தி கொன்னுட்டாங்க … அப்பவும் நீ போலீசா வரல …… ஏன்னா… காசுக்காக அதுல நீயும் உடந்தையாகிட்ட…. உடனே ஒரு முடிவுக்கு வந்தேன் … உன்னையும் இந்த குழந்தைகளை கடத்தி விக்கற கும்பலோட மொத்த நெட்வோர்க்கையும் அழிக்கணும்னு… ஆனா அது என்னால தனியா முடியாதே …. ஏனா உனக்கு தான் எல்லா விஷயமும் தெரியும் …. அதனால தான் உன்னை காதலிக்கிற மாறி நடிச்சேன்.”

“அண்ட் இன்னொரு விஷயம்… எனக்கு ஆம்பிடேக்ஸ்ட்ரஸ்…. புரில்ல …. என்னால ரெண்டு கையாலும் வேலை செய்ய முடியும்… உங்கள திசை திருப்ப தான் விகாஷாவ லெப்ட் ஹாண்ட்ல கொன்னேன் … அண்ட் சந்தேகம் வரக்கூடாதுன்னு தான் ஒரு சிகரட் துண்டப் போட்டு வச்சேன் … அந்த விகாஷாவும் அந்த நெட்வொர்க்ல முக்கியமானவ. மத்தவங்கள அவங்க அவங்க வீக்னஸ்க்கு ஏத்த மாதிரி கொன்னேன்….. இயற்கையா மாத்தினேன். நீ மீட்டிங்கில இருக்கும் போது போன்ல வாய்ஸ் மாத்திப் பேசுனதும் நான் தான். இப்போதைக்கு இந்த குழந்தை கடத்தல் நெட்வொர்க்ல இருக்கற கடைசி ரெண்டுபேர்… ஒன்னு இக்பால் … இன்னொன்னு அவங்க அண்ணன்…”

“உன்னையும் சும்மா விட மாட்டேன் வருண் … என வில்லத்தனமாக சிரித்து கொண்டே இருவரையும் நோக்கி துப்பாக்கியால் குறி வைத்தாள்… மூன்று பேர் கைகளிளும் துப்பாக்கி ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டிருந்தது .

துப்பாக்கியின் ட்ரிகரை இக்பாலை நோக்கி அழுத்தினாள் வீணா. துப்பாக்கி சுடவில்லை. இக்பால் சிரித்தான்.

“இது இப்போ நான் சிரிக்க வேண்டிய நேரம் வீணா…. “ என்று தன் உடம்பில் உள்ள ஒரு பட்டனை ஆன் செய்தான். ”இது டைமிங் மனித வெடிகுண்டு… இன்னும் ஒரு நிமிஷத்துல எல்லாரும் சாகப் போறோம்” இப்போது வீணாவுக்கு அதிர்ச்சி …. அதே சமயம் வருண் சுதாரித்துக் கொண்டு வேகமாக அந்த அறைக் கதவைத் திறக்க முயன்றான்.

“வருண் …செல்லம் … ரொம்ப ஸ்மார்ட்டாக இருக்கலாம்னு பாக்காத …. எல்லா கதவும் பூட்டியாச்சி…. இந்த ரூம விட்டு எங்கயும் போக முடியாது. இன்னும் முப்பது செகண்ட் தான் இருக்கு” என சிரித்தான் இக்பால்.

வருணும் வீணாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இருவரும் வேகமாக சென்று இக்பாலை இடித்தபோது அவன் சுவரில் அடிபட்டு மயக்கமடைந்தான் .

“வீணா நான் சொல்ற மாதிரி கேளு … இந்த பாம் கொஞ்சம் வித்தியாசமா இருக்கு … இதை பத்தி நான் இண்டர்நெட்டில் படிச்சிருக்கேன். கண்டிப்பா இந்த நீல வயர்தான் டைமிங்க கட்டுப்படுத்தும். ஆனா இத நாம ரெண்டு முனைகளில் இருந்தும் ஒரே நேரத்தில கட் பண்ணனும்“ என்று முடிக்கும் போது அங்கே பத்து நொடிகளே இருந்தது. இப்போது அவள் சம்மதிப்பது போல் இருந்தது வருணுக்கு.

“ரெடி …. ஒன்… டூ … த்ரீ…. கட்” அங்கே அந்த பாம் செயலிழுந்து போய் இருந்தது.

“தாங்க்ஸ் வீணா …” என பெருமூச்சு விட்டான் வருண்.

“அவ்ளோ சீக்கிரம் உன்ன சாக விட்ருவனா.. வருண் ??” என்று இக்பால் கையிலிருந்த துப்பாக்கியை எடுத்து வருண் நெற்றியில் வைத்தாள் வீணா.

“அரஸ்ட்…. தேம்…”… என்று உள்ளே நுழைந்தார் ஏசி…… யாருக்கும் ஏதும் புலப்பட வில்லை. இக்பாலை அரஸ்ட் செய்து ஜீப்பில் ஏற்றினார் ஏ.சி.

“கேஸ் ரொம்ப கிரிடிக்கல்னால நான் உன்ன மீட்டிங்ல இருந்து பாலோ பண்ணிட்டு இருக்கேன் வருண். ஒரு பப்ளிக் கூட கோஆபரேட் பண்ணாம அநியாயமா ஒரு குடும்பத்தோட சாவுக்குக் காரணம் ஆகிட்டீங்களே. எனிவேஸ்…..ஐ யாம் சாரி வருண் … யு ஆர் சஸ்பெண்ட்டட் பார் சிக்ஸ் மந்த்ஸ். அண்ட் யு…. என்னதான் நீங்க தப்பு பண்ணி இருந்தாலும் … யு ஹவ் காட் தி ரைட் கைஸ்….”… இக்பாலோட அண்ணனை நாங்க பாத்துறோம். யு டோன்ட் வொர்ரி …”

……………………………………………………………………………………………………………………………………………………………………

சில வாரம் கழித்து இக்பாலும் அந்த குழந்தைகள் கடத்தும் மொத்த நெட்வொர்க்கில் உள்ள எல்லோரும் அழிக்கப்பட்டர்கள் என்ற செய்தி வருணுக்கு சந்தோஷமாய் இருந்தாலும் …. வீணா தன்னை விட்டு பிரிந்தது வருனால் தாங்க முடியவில்லை.

அன்று இரவு உறங்காமல் புரண்டு படுத்து கொண்டிருந்தான் .

யாரோ கதவு சத்தம் கேட்டது. வெளிய கதவை திறந்து பார்த்தால் யாரும் இல்லை. கதவை மூடப் போகும் போது கீழ ஒரு போஸ்ட் கார்ட் இருந்தது.

“சொர்க்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது”

“பிரபல போலிஸ் இன்ஸ்பெக்டர் வருண் குழந்தை கடத்தும் கும்பலுடன் தொடர்பு வைத்திருந்ததால் மர்மாக முறையில் கொலை செய்யப்பட்டார்“ என தலைப்புச் செய்தி ஓடிக் கொண்டிருந்தது. வீணா அங்கே சந்தோஷமாகத் தன் புது பணிக்காக பெங்களூர் சென்று கொண்டு இருந்தாள்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “சொர்க்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

  1. ஒரு திரில்லருக்குண்டான எந்த அதிர்ச்சியோ ஆச்சர்யமோ துளியும் இல்லை. மிக மேம்போக்கான கதை. சாரி பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் தோழர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *