-துஷ்யந்தி
சொற்களுக்கும் முட்களுக்கும்
சொல்லிலடங்கா ஒற்றுமைகள்
உண்டென்று கண்டுகொண்டேன்
இன்று உன் வார்த்தைகளில்… 
ரோஜாவென்று வாசம்காட்டி
இன்பம்காட்டி உள்ளமெல்லாம்
இன்னிசை மழை பொழிய
வைத்ததுவும் நீதானே…!
இல்லாத ஒன்றுக்காய்
இன்பங்கள் அத்தனையும்
கண்ணிமைக்கும் நேரத்தில்
தகர்த்ததுவும் உண்மைதானே…!
மெல்லிய ஸ்பரிசமாய்
என்னுள்ளே நினைவானாய்
உள்ளத்தில் நீங்காத ரோஜா
வாசனை நீயானாய்…!
மென்மையும் வெண்மையும்
தைத்ததில் என்னுள்ளே
இன்னமும் கசிகின்றது
இதயத்துள் வலிகளாய்…
சிக்கிக்கொண்ட வார்த்தைகள்
சீர்திருத்தி மீண்டு வர
எத்தனை நாள் காத்திருக்க?
சொல்லிவிடு இன்றெனக்கு…!
முட்களில் பிறந்த ரோஜா
சிக்கியதில்லை முட்களில்
அப்படித்தான் நினைத்திருந்தேன்
மாய உலகில் உன்னையும்
வார்த்தைகளில் வலைவிரித்து
வாஞ்சையாய்ப் பேசவைத்து
மீண்டிடா ரணம்கொடுக்க
உன்னால் எப்படி முடிந்தது??

Leave a Reply