கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
இன்று கண்ணன் அம்ப்யர் போல் இருகரங்களை தூக்கி
மழையில் நனையும் மாடுகளுக்கு ‘’ஆறு’’தல் சிக்ஸர்
அளிக்கிறான்….
”ஆண்டவன் நானென்(று) அறிந்தபின்னும் இந்திரா,
மூண்டெழச் செய்வதேன் மாரியிது -வேண்டாமே!,
மேடெடுத்து அம்ப்யர்போல் மாடுகளுக்(கு) ஆறளித்த
தேர்ட்அம்ப் பயரும்நான் தான்’’….கிரேசி மோகன்….
மேடு -கோவர்த்தனக் குன்று….மாரி -மழை….