இன்று ஓராண்டு !

கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

 
காலம் கரைந்து செல்கிறது.
நேற்று இருந்தவர் இன்று இல்லை

வாழ்க்கை என்கின்ற நியதிக்குள் யாவரும் உட்படுகின்றனர்.
அந்த நியதியையும் வென்று
மக்கள் மனங்களில் வாழும் உறவுகள்
என்றென்றும் மதிக்கப்படுகின்றார்கள்.
நினைவுபடுத்தப்படுகின்றார்கள்

அவ்வகையில் என் இதயத்தின்
அடையாளமாக இருக்கக் கூடிய உறவு
என் றாத்தா சித்தி பௌசியா(ஜெஸிமா ) ‘அவர்கள்
.

அவருடைய மறைவு நிகழ்ந்து
இன்று ஓராண்டு பூர்த்தியாகின்றது.
நம்ப முடியவில்லை.
என் றாத்தா என்னுடன் இல்லை என்பதை!
அவர் என்னுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்
என்கின்ற உணர்வையே தந்து கொண்டிருக்கிறது.
அந்த உணர்வு இன்று இக் கவியோடு நிழலாடுகின்றது!
……………………………………………………………………………………………..
நகர்ந்து விட்டது ஓர்ஆண்டு மனத்துயரம் மாறவில்லை

உடன்பிறப்பு உன்பிரிவால் மகிழ்ச்சி பறந்தது

சுமையாகிவிட்ட உலகில் சுமக்கமுடியா நிலையிலே நான்

மனநிம்மதி யில்லாமல் துடிக்கின்றேன் உன்மறைவால்

வாழுகின்ற வாழ்க்கையில் உன்னைநினைத்து எந்நாளும்

வடி(க்)கின்ற கண்ணீரை துடைத்து ஏங்குகின்றேன்

மரணத்தால் என்னை விட்டுச்சென்றீர், தொப்புள்கொடியுறவால்லல்ல

சுவர்க்கலோகம் சென்றதுபோல் நினைத்திருக்கின்றேன் மண்ணில் .!
உடன்பிறந்த தங்கையாய் தவிக்கின்றேன் றாத்தா !

எழுதிடும் கவிதைகள் என்மன நிலைதனை புரிந்து

இடி விழுந்து சிதறிய மன நிலை போல

கலங்குகின்றேன் உன்மௌத்தை நினைத்து நினைத்து

குருவிக் கூட்டம்போல றாத்தா மகிழ்ந்திருந்தோம் நாம்

இன்று நிலையாகச்சென்றுவிட்டீர் மனதில் வேரூன்றிவிட்டு

கலண்டர் தாள்களை ஒன்றொன்றாய் கிழித்தாலும்

மாறாத்துயரத்தை தாங்கிட பொறுமை தா! யாஅல்லாஹ் !

அன்புத் தோழியாக பாச பிறப்பாக என்னோடு

இணைந்திருந்து வரம்பெற்ற உறவாக வாழந்துவிட்டு

இன்று என்னைவிட்டுச் சென்றாலும் உங்களன்பு

ஒருபோதும் என்னுள்ளத்தைவிட்டு நீக்கிடாது பேணுகின்றேன்

ஒற்றைத்தாயின் இரட்டைக்குழந்தையாய் வாழ்ந்தோம் பிறப்பிலே

சுனாமியடித்துச் சிதறிய கிரமாம் போலானேன்

என்றும் என்னுயிர் இவ்வுலகில் உள்ளவரை

வருடங்கள்நகர்ந்தாலும் உன் நினைவு என்னைவிட்டுநீங்காது !

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *