எத்தனையோ ஸ்லோகங்கள் இருந்தாலும், எனது பிரார்த்தனை வரிகள் ”கந்தன் கருணை” படத்தில் பி.சுசிலா அம்மையார் அவர்களின் தேனினும் இனிய குரலில், கே.வி.மகாதேவன் இசையமைப்பில் பார்வதி(சாவித்திரி அம்மா) தன் மகன் முருகனைக் கொஞ்சும் கவிஞரின் தாலாட்டு வரிகள் ”உயிரினங்கள் ஒன்றையொன்று வாழ்த்திடும் போது அதன் உள்ளிருந்து வாழ்த்துவது உன் குரலன்றோ முருகா உன் குரலன்றோ”….கிரேசி மோகன்….

kannadasan2

இன்று கவிஞர் கண்ணதாசன் பிறந்தநாள்….
——————————————————-
”உயிரினங்கள் ஒன்றையொன்று உள்ளிருந்து வாழ்த்தல்
அயிவேலன் வாக்கென்ற, அந்த -மயிலிறகு
கண்ணனின் தாசன் கவிச்சக்ர வர்த்தியின்று
மண்ணில் பிறந்தார் மலர்ந்து”….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இன்று கவிஞர் கண்ணதாசன் பிறந்தநாள்….

  1. ”உயிரினங்கள் ஒன்றையொன்று வாழ்த்திடும் போது அதன் உள்ளிருந்து வாழ்த்துவது உன் குரலன்றோ முருகா உன் குரலன்றோ” என்ற கவியரசரின் வரிகளில் உள்ள ஜீவனைச்  சரியாகத் தொட்டுக் காட்டிய கவிஞர் கிரேசிமோகன் அவர்களின் வெண்பா அழகு.
    அன்பன்,
    மீ.விசுவநாதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.