கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”முழங்கால் முடிச்சேறி, மொட்டையிட்டு மாலை
தொழுங்கால் துயரம் தொலையும் -விழுங்கிஆல்
தன்னில் மிதந்த தவசுப்ர பாதனவன்
முன்னில் அவிழும் முடிச்சு”….
”அவலுக்கு செல்வம், அழகுமயில் ராதை
அவளுக்குக் காதல், விஜயன் -கவலைக்கு
கீதை, அடியார்தம் கண்ணீர் திவலைக்கு,
தாதை அளிப்பான் துடைப்பு”….கிரேசி மோகன்….