சேசாத்திரி பாஸ்கர்

ஒரு சினிமா கொட்டகையில் இப்போது குறைந்த பட்சம் டிக்கெட் விலை நூற்றி இருபது ருபாய் .இரு சக்கர வாகனம் நிறுத்த கட்டணம் முப்பது ருபாய் .வெளியே வாங்கிய தின்பண்டங்களை உள்ளே எடுத்து செல்ல அனுமதி இல்லை . முன்பு கபாலி காமதேனு தியேட்டர்களில் கூட ஒரு எவர்சில்வர் அண்டா போல பாத்திரத்தில் குடிநீர் இருக்கும் .ஒரு டம்ப்ளரில் நீரை பிடித்து குடிக்க வேண்டும் .களவு போகாமல் இருக்க டம்ப்ளரில் ஒரு செயின் கட்டி இருப்பார்கள் .தலையை கீழே குனிந்து குடிக்க சட்டையெல்லாம் வீணாகும் .அது பரவாயில்லை போல்இருக்கிறது . இப்போது இந்த பெரிய கொட்டகையில் பாட்டில் தண்ணீர் தான் .நாற்பது ருபாய் .சின்ன பாப்கார்ன் பொட்டலம் என்பது ரூபாயாம் . அடப்பாவிகளா ? என்னை போல் ஆசாமிகள் உள்ளே சென்றால் சண்டை தான் .இத்தனைக்கும் கிட்டத்தட்ட எல்லா சினிமாவுக்கும் இப்போது வரிவிலக்கு.இவ்வளவு வசதிகள் அரசிடம் இருந்து பெற்று கொண்டு விடுமறை நாளில் பத்து காட்சிகள் வரை திரையிட அனுமதி பெற்றும் இவர்கள் ஆசை அடங்கவில்லை .ஒரு சின்ன கணக்கு நேற்று இரவு போட்டு பார்த்தேன் . ஒரு காட்சியில் ஆயிரம் இருக்கைகள் கொண்ட அரங்கில் முந்நூறு பேர் இரு சக்கர வண்டியில் வருவோர் என்றால் அவர்கள் தரும் தொகை சுமார் ஒன்பது ஆயிரம் ருபாய் .இது ஒரு காட்சிக்கு .ஒரு நாள் வசூல் சுமார் இருபத்தி ஏழாயிரம் என்றால் வருஷம் கிட்டத்தட்ட ஒன்பது கோடி .தனி மனித ஒழுக்கம் , நேர்மையான வியபாரம் , தொழில் தர்மம் எல்லாம் போதித்தவர்கள் எல்லாம் முட்டாளா ?இந்த சமூகம் நல்லவர்களை நகர்த்தி கொண்டிருக்கிறது .எல்லாம் நியாயம் என்றால் என்னையா ஊர் இது .? காந்தி நீதிமன்றம் வந்த போது நீதிபதியே எழுந்து நின்ற இந்த தேசத்தில் இப்படியா ?மனசு ஆறவில்லை …….Agitated .

Baskar CS
Chennai 4

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *