MSV_Twitter

 

கவாஸ்கர்-சவ்ஹான் போன்று, டெண்டூல்கர்-கங்குலி போன்று, விஸ்வனாதன்-கண்ணதாசன் பார்ட்னர்ஷிப் தமிழ் சினிமாவை ஜெயிக்க வைத்தது….விஸ்வனாதன் சார் மேலுலகம் சென்றிருக்கிறார்…மெல்லிசை மேலிசையாகி தெய்வங்களுக்கு ”கிருஷ்ண கானம்” போல் ”தேவ கானம்” மெட்டமைக்கச் சென்றுள்ளது….எனக்கு இவர் ”காதலா காதலா” படத்தில் நடிகராகத்தான் பழக்கம்….வசனம் எழுதிய ஒரே காரணத்திற்காக ,அடியேன் கூசும் அளவுக்கு என்னை ”ஆசிரியரே ஆசிரியரே” என்று அழைப்பார் இந்த ஆசான்….”எளிமை Thy Name Is Visvanaathan”….

”மெல்லிசை மன்னரவர், மேலிசை மன்னராய்,
தொல்லுலகை விட்டகன்று, தெய்வங்கள் , -சொல்லசைவு,
ஓங்காரத் திற்(கு)உயர், ஓசை கொடுத்ததை(மெட்டமைத்து),
ரீங்காரம் செய்யப்போ னார்”….கிரேசி மோகன்….

 

”புல்லுசர்ந்து ஆகும் பலாமரமாய், அஃறிணைக்
கல்லசைந்து கொட்டிடும் கற்பகமாய், -மெல்லிசை
மன்னரவர் மெட்டுக்கு, கின்னரரும் நாணுவரே:
WINNERரவர் எம்MS V”….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.