நம்பாளை வரைந்ததற்கு நன்றி கேசவ்….

கிரேசி மோகன்

crazy

அஞ்சும் அருச்சுனர்க்கு ஆறுதல் கூறியன்று
அஞ்சரசு ஆளவைக்க, ஆண்டதேர்மேல் -அஞ்சனை
சேய்பறக்கக் கையில், சவுக்கெடுத்த சாரதி,
ஆய்க்குல சிங்கா அருள் ….

பாலுக்கும் காவலாய், பூனைக்கும் தோழனாய்அப்,
பாலுக்கும் அப்பாலே பாதுகாக்கும் -மாலே,
பழகிடப் பூனையே, பாய்ந்தால் புலியே,
அழகிய சிங்கா அருள் ….

நாணமின்றி யுத்தத்தில், நாலுகால் ஜந்துக்கள்,
சாணமள்ளிக் கொட்டும் ஜனார்த்தனனை, -ஞானமள்ளி
உண்ணென கீதையை, ஊட்டியதே ரோட்டியை,
கண்ணனை நெஞ்சே கருது ….

காலை எழுந்தவுடன், கண்ணன் பெயர்சொல்லி,
மூளை அடுப்பை மூட்டிடு, -மாலை,
மலைவனம் சென்றாயர், மாடுகள் மேய்க்க
அலைபவன் பேரால், அணை(SWITCH OFF) ….

மூப்பிழைய, மூச்சடைக்க, சாப்பாடே நஞ்சாக,
கூப்பிடாத காலன் கரம்குலுக்க, -ஆப்பழியும்,
அந்திம நாளேனும் ,அய்யோ மறவாது,
நந்த குமாரனை நம்பு ….

பலன் -வேதவல்லித் தாயார் அருள்….
————————————————————————–
வேதவல்லித் தாயே, வினைதீர்க்கும் செங்கமலப்
பாதவல்லி, பார்த்தன்தன் சாரதியின் -கீதவல்லி,
ஏதமில்லா ஞானத்தை, ஏதுமில்லா மோனத்தை,
சாதகனென் சிந்தையில் சேர் ….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.