ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 13

0

சி. ஜெயபாரதன்.

கலில் கிப்ரான்

(1883-1931)

ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

மூலம் : கலில் கிப்ரான்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 ஓ இரவே !

 

ஓ இரவே

__________________________

உன் சினத்தைக் காண்கிறேன்
வெல்வெட் மெத்தையில் உறங்கும்
வேந்தர் மீது !
கள்வரைக் காண்கிறேன் !
தூங்கும் சிசுக்களைக் காத்து
விழித்திருக்கும்
உன் கண்முன்னே
மெய்க் காதலர்
கண்ணீர்த் துளிகள் மீது
பொதுவின் மகளிர் பொழியும்
போலிப் புன்னகை
நோக்கி நீ
ஓலமிடுவதைக் காண்கிறேன் !
தீயவரை மிதிக்கும்
உந்தன் பாதமும்
நல்லவர்க் குதவ ஓடும்
உனது வலக் கரமும்
எனக்குத் தெரிகிறது !

__________________________

இரவே ! அங்கே
உன்னைக் காண்பேன்
என்னைக் காண்பாய் நீயும் !
பயங்கர மாயினும் நீ
தந்தை போல் தெரியுது எனக்கு !
என்னை
உனது மகவாய்க் கற்பனித்துக்
கனவு காண்பேன் !
நம்பிக்கைத் திரை
நம்மிடையே நீக்கப் பட்டது !
உன் ரகசியங்கள் –
படைப்புகளை என்ன வென்று
உரைத்திடு !
என் இச்சைகள் –
எதிர்பார்ப்புகளை
என்ன வென்று
எடுத்துச் சொல்வேன் நானுனக்கு !
உன் கோரச் செயல்கள்
மாறிடும் இன்சுவைக் கானமாய் !
ஆறுதல் அளித்து நெஞ்சை
பேரமைதி யாக்கும்
பூக்களின் மெல்லிய
முணு முணுப்புக்கு மேலாய் !

__________________________

பலவீனமான ஒருவன் வலுத்தவனின் கொடுமைகளைப் பற்றிப் புகார் செய்யும் போது அண்டை வீட்டுக்காரன் இப்படிச் சொல்லி அவனை அமைதிப்படுத்துவான்: “மெதுவாய்ப் பேசு இதனைக் கேட்கும் மன அழுத்தக்காரரின் இதயம், வேகமாய் ஈட்டி தாக்குவதைத் தாங்கிக் கொள்ளாது.”
கலில் கிப்ரான். (The Narcotics & Dissecting Knives)

__________________________

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *