ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 22
–சி. ஜெயபாரதன்.
(1883-1931)
ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்
மூலம் : கலில் கிப்ரான்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
பூரணம் அடைவது
____________________________
“ஒரு கண்ணுக்கு ஒரு கண் பழிவாங்கப் பட்டால் உலகம் பூராவும் குருடாகிவிடும்.”
கலில் கிப்ரான்.
“முன்னேறு ! ஒருபோதும் நில்லாதே ! ஏனெனில் முன்னேறுவது முழுமை பெற்றது. முன்னேறிச் செல் ! பாதையில் உள்ள முட்களுக்குப் பயப்படாதே ! காரணம் அவை லஞ்சக் குருதியைத்தான் உறிஞ்சும்.”
கலில் கிப்ரான்.
___________________
பூரணம் அடைதல் எப்போது ?
___________________
எப்போது பூரணம் அடைவான்
மனிதன் என்று நீ
எனைக் கேட்டாய் சகோதரா !
கேள் எனது பதிலை :
எல்லை யற்ற வெளியிலே
கரை யில்லாக் கடலிலே
முடிவில்லாத் தீயிலே
தடுக்க முடியா ஒளியிலே
மௌனக் காற்றிலே
அல்லது
பாய்ந் தடிக்கும் புயலிலே
இடி முழக்கும் வானிலே
அல்லது
மழை பெயும் சொர்க் கத்திலே
சிரித்தோடும்
சிற்றோ டையிலே
வசந்த காலப் பூ மரத்திலே
வானோங்கும்
மாமலைச் சிகரத்திலே அதன்
ஆழ்குழிப் பள்ளத்திலே
செழித்து வளரும் நிலத்திலே
பாலை வனத்திலே
தான் ஒருவன் என்று
எப்போது உணர்வானோ
அப்போது !
___________________
“பூமியில் தோன்றிய மனித இனம் உன்னத இறைவனின் ஆன்மாவே. அந்த மகத்தான கடவுள் பேரன்பையும் நன்னெறியையும் உபதேசிக்கிறது. ஆனால் மக்கள் அப்போதனைகளைக் கேலி செய்கிறார். நாஸரத் ஏசு நாதர் அவற்றை ஏற்றார். அதற்காக அவர் சிலுவையில் அறையப் பட்டதே அவருக்கு வெகுமதி. சாக்ரடிஸ் அக்குரலைக் கேட்டார். அவரும் பலியானார். ஏசுவையும், சாக்ரடிஸையும் பின்பற்றி வருகிறார் எண்ணற்ற அவரது சீடர்கள்.”
பைத்தியம் என்று சொல்லும் அளவுக்கு மீறி வெறி கொண்டவர் அவர். அவர் ஒரு பூரணவாதி (Idealist) ஆன போதிலும் அவரது இலக்கியக் குறிக்கோள் வாலிப இதயங்களில் நஞ்சிட்டுப் பாழாக்குவதே !
திருமணம் பற்றி மனிதரும், மாதரும்.
கலில் கிப்ரான்