மரபின் மைந்தன் முத்தையாவின் வலைதளம்
அன்பினிய நண்பர்களே,
www.marabinmaindan.com எனும் பெயரில், மரபின் மைந்தன் முத்தையாவின் வலைதளம்தொடங்கப்படுகிறது. இதன் தொடக்கவிழா 07.11.2015 சனி மாலை 6.30 மணிக்கு கோவை ராம்நகரிலுள்ள விஜய் பார்க் இன் ஹோட்டலில் உள்ள வெங்கடேஷ் மஹாலில் நிகழ்கிறது.
எழுத்தாளர்,பேச்சாளர், சுயமுன்னேற்றப் பயிற்சியாளர்,கவிஞர், பத்திரிகையாளர் என்று பன்முக பரிமாணங்கள் கொண்டவர் திரு.மரபின்மைந்தன் முத்தையா.இவரது படைப்புகள் நிகழ்ச்சிகள் பயிலரங்குகள் புத்தகங்கள் வலைப்பதிவுகள் உரைகள் காணொளிகள் என அனைத்தையும் ஒரே இடத்தில் காண்கிற விதமாக www.marabinmaindan.com என்னும் பெயரில் வலைதளம் அமைக்கப்பட்டு அதன் தொடக்க விழா நிகழ்கிறது.
இவ்விழாவிற்கு எழுத்தாளர் நாஞ்சில் நாடன் தலைமை வகிக்கிறார்.கோவை ஶ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் திருமதி எஸ்.மலர்விழி, வலைதளத்தை தொடங்கி வைக்கிறார்.ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர் திரு.ம,கிருஷ்ணன் முன்னிலை வகிக்கிறார்.
பாலரிஷி ஶ்ரீ விஸ்வசிராஷினி ஆசியுரை வழங்குகிறார். எழுத்தாளர் வண்ணதாசன் சிறப்புரை ஆற்றுகிறார்.வெற்றித் தமிழர் பேரவையின் சென்னை மாவட்ட செயலாளர் திரு.வி.பி.குமார், கோவை மாவட்ட அமைப்பாளர் திரு,கோவை ரமேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
திரு.நா.வெங்கடேஷ் வலைதள விளக்கம் வழங்குகிறார். முன்னதாக வெற்றித் தமிழர்பேரவையின் கோவை மாவட்ட அமைப்பாளர் திரு. மு. முருகன் வரவேற்புரை வழங்குகிறார்.நமது நம்பிக்கை மாத இதழின் உதவி ஆசிரியர் திரு.சிவக்குமார் பழனியப்பன் நன்றி நவில்கிறார்.
விழா நிகழ்ச்சிகளை செல்வி.அகிலா தொகுத்து வழங்குகிறார்