க. பாலசுப்பிரமணியன்

Six-Abodes-of-Murugan1

குக்குக்கூ…….குக்குக்கூவெனக்  குயில் போலக்கூவும்

என் நெஞ்சம் மயில் போல ஆடும்!.. முருகா..  குக்குக்கூ…….குக்குக்கூவெனக் குயில் போலக்கூவும்

என் நெஞ்சம் மயில் போல ஆடும் !!

 

குன்றத்திலே .. பரங்குன்றத்திலே ..

திருப்பரங்குன்றத்திலே உனைக் கண்டால்….. முருகா

குக்குக்கூ…….குக்குக்கூ…. குயில் போலக்கூவும்,

என் நெஞ்சம் மயில் போல ஆடும் !!

 

செந்தூரக்கடலோரம் உனைக்கண்டோ ..முருகா

கடலலை போலப் பாயும் .. என் நெஞ்சம்

கந்தா, உன் காலிரண்டை நாடும்-கந்தன்

கருணையிலே காலமெல்லாம் வாழும் !!

 

தணிகையிலே .. திருத்தணிகையிலே

உனைக்கண்டோ முருகா..!

தென்றலாய் மாறும் என் நெஞ்சம் !! ..

திருவருள் வேண்டி உன்னை நாடும்

 

சோலையிலே .. பழமுதிர்சோலையிலே .

உனைக்கண்டோ ..முருகா .. என் நெஞ்சம்

ஆறும்… இளைப்பாறும் .. உன் விழிவாசலிலே.

துயர் நீக்கிக் களைப்பாறும் !!

 

பதியினிலே,  பழநிப்பதியினிலே

உனைக்கண்டோ ..முருகா,,,  என் நெஞ்சம்

பாடும், தமிழ் பாட்டொன்று பாடும் ..

முத்தைத்தரு பத்திதிருநகையென ஓதும் !!

 

மலையினிலே .. சுவாமிமலையினிலே…

உனைக்கண்டோ …முருகா  ..

நாடும் அருள் நாடும் — அப்பனைப்போல்..

கைகட்டி வாய்பொத்தி அருள்மொழி கேட்கும் !!

 

அறுபடை வீடினிலே உனைக்கண்டால்  முருகா

.என் நெஞ்சம் ஆடும் ….அது பாடும்

கொஞ்சம் தாவும்.. …உந்தன் அருள் நாடும்

கூவும்… குக்குக்கூவெனக் குயில் போலக்கூவும்!!!

 

குக்குக்கூவெனக் குயில் போலக்கூவும்

என் நெஞ்சம் மயில் போல ஆடும் .. முருகா..

குக்குக்கூவெனக் குயில் போலக்கூவும் .

அது மயில் போல ஆடும் !!

 

 

 

 

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *