47a197ae-c1d2-4ea9-af26-30e13d94fef9

ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி சரிதம்

          மீ.விசுவநாதன்

( பகுதி: எட்டு  )

 

உடையிலும் எளிமை

 

எல்லோரும் அவளை

திருடி என்று

சொல்லாலடித்துத் திட்டினர் !

வருடிக் கொடுத்து

அன்பு காட்டும்

அம்மாவும் அண்ணாவும்

கூட தினமும்

அவள்  தலையில் குட்டினர் !

பண்டிகைக் காலத்தில்

புத்தாடைகளைக்

கொண்டனர் உடன்பிறந்தார் !

அவளுக்கோ

நித்தமும் கிழிந்த உடைகளே

தந்தனர்  குடும்பத்தார் !

அவளோ

பொத்தலைத் தைத்து

சுத்தமாய் அணிந்தாள் உடையை !

மற்றவர் குறையை

மறந்து கட்டினாள்தன் நடையை !

 

பழகுவதற்கும் தடை

 

பதினாறு வயதுப் பெண்ணவள்

அவள்வயதுப் பெண்களுடன்

பழகக் கூடாது என்றான் அண்ணன் !

அதனால் எப்போதும்

குழந்தைகளையே கொஞ்சி

கவலை மறக்கப் பாடினாள்

அதுகேட்டு மகிழ்ந்தான் கண்ணன் !

 

இரவில் வானில்

நிலவைப் பார்ப்பாள் !

என் கண்ணனைப்

பார்த்தாயா என்பாள் !

பக்திச்

நிலவாய்க் குளிர்வாள் !

நினைவை மறந்து

நிலத்தில் சரிவாள்!

 

கண்ணனின் காட்சி கிடைத்தது

எப்போதும் தன்னையே  எண்ணும்

சுதாமணிக்கு

இப்போது காட்சிதந்தான்

பாலகிருஷ்ணனாய் மாயன் !

பசுக்களை மேய்க்கும்

பிருந்தாவன ஆயன் !

 

மயில் பீலி கொண்டு

ஆடினான் அவள் முன்னே !

நெஞ்சம் முழுக்க

நெயில் செய்த இனிப்பாய்

ஆனாள் அவள் தன்னே !

அந்த உணர்வை

அவளால் விள்ள முடியாமல்

பூஜை அறைக்குள்

சென்று பலமணிநேரம் நிற்பாள்

புறவின்பம் கொள்ள முடியாமல் !

 

அகவான் பரப்பில் கிருஷ்ணனை

ஆதவனாய்ப் பார்த்தாள்

பகவான் தன்னோடு இருப்பதால்

பக்தியினால் வேர்த்தாள் !

 

அவளுக்கு

ஓங்கார மானது

புற ஓசைகள் !

தீங்கான மானது

தின பூசைகள் !

இயற்கையில் தன்னையும்

தன்னிலே அனைத்தையும்

உணர்ந்து உயர்ந்தாள் !

அன்னையும் தந்தையும்

அவளே என்னும்

அநுபூதி அடைந்தாள் !

 

அமைதியாய் இருந்து

அணுக்குள்ளே உள்ள

இமையத்தைக் கண்டாள் !

எப்போதும் போலவே

உப்போடு இருக்கும்

நன்றியாய்

வீட்டிற்காய் உழைத்தாள்

நல்மணியாய்

நாட்டிற்காய்த் தழைத்தாள் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *