மார்கழி மணாளன் – 26 – திருக்கோஷ்டியூர் -ஸ்ரீ சௌம்ய நாராயணப் பெருமாள்

0

க. பாலசுப்பிரமணியன்

3b7d82e4-d54c-4465-be64-8d85f073c33b

நல்லோரும் வல்லோரும் நான் முகனும்

நமச்சிவாயத்தொடு கூடிய  திருத்தலமே !

ஊர்வாழ உலகம்வாழ கைகோர்த்து வாழ

உள்ளங்கள் ஒன்றாக்கி காட்டிய தத்துவமே !

 

பூவலகில் கண்ணனின் கால் வண்ணம்

பாற்கடலில் கிடக்கும் உடல் வண்ணம்

வைகுந்தத்தில் அவன் முழுவண்ணம்

மூவுலகும் ஒன்றாக்கும் எழில் வண்ணம் !

 

நானென்று வந்தான் நல்லதோர் மாணவன்

நாரணன் மந்திரம் நம்பியிடம் கற்றிட

வாவென்று சொல்ல மறுத்து வருத்தியே

வந்தானைத் திருப்பினார் ஆசானும் நம்பியே !

 

நானழிந்து வந்தவன் நற்கதி பெற்றிட

நாரணன் அட்சர மந்திரம் அறிந்தான் !

நானிலம் அனைத்துமே நற்கதி பெற்றிட

நற்கோவில் மேல்நின்றே  ஒதிட்டான் !

 

நரகத்தின் பயமில்லை நல்லதோர் நெஞ்சுக்கு

நானிலம் வாழ்ந்திட்டால் நலமே உலகுக்கு

சாதியும் மதமும் சந்நிதியில் ஒன்றுதான்

சமத்துவப் பார்வை கண்ணனின் கீதைதான் !

 

பெருமாளின் அருள்பெற்ற அந்தணன் ராமனுஜன்

பெருந்தகை நம்பியின் ஆசியால் எம்பெருமான் !

ஊரினைக்கூட்டி   திருவடி மந்திரம் தந்தவன்

திருவருள் பெருக்கிட்ட திருமாலின் திருத்தலம் !

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *