“அன்புள்ள அம்மா” (10)
ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி சரிதம்
மீ.விசுவநாதன்
நாத்திகம் மாறியது
அந்த நாளும் வந்தது
அந்த வீட்டில் பாகவத
பாராயணம் ஒலித்தது !
அது கேட்டு
அவளின் கால்கள் அங்கே
முந்திக் கொண்டு வந்தது !
கிருஷ்ண நினைவிலே
கரைந்த அவள்
சொன்னதெல்லாம் பலித்தது !
நாத்திகர் ஒருவரை
அருகில் அழைத்தாள் நயந்து !
தந்தாள் அவரிடம்
தண்ணீர் உள்ள பாத்திரத்தை !
அவள் தொட்டாள்
தீர்த்தமானது ! மீண்டும்
அதிலே அவர் கையை
விட்டதும் பாலானது !
உடனே விட்டார்
சுதாமணி மீதிருந்த ஆத்திரத்தை !
நாத்திகர் நின்றார் வியந்து !
அவள் சக்தியைப்
பார்த்துப் பார்த்து பயந்து !
ஆத்திகத்தில் நம்பிக்கை
இல்லாத இன்னொருவரை
அழைத்தாள் !
அதே பாத்திரத்தில்
அவர் கையை விடச் சொன்னாள் !
அவர்கையில் பஞ்சாமிருதம்
அவள் சொன்னாள்
அதுதான் கிருஷ்ணாமிருதம் !
அவருக்கு ஆச்சர்யம்
அவர் உடம்பெல்லாம்
மயிர்க் கூச்சர்யம் !
அன்பையும் நேர்மையையும்
நம்பிக் கைபிடித்தால்
நம்பிக்கை வேர்பிடிக்கும்
நாத்திகம் மறைந்து
ஆத்திகம் ஏர்பிடிக்கும் !
ஆதரவு கேட்டவர்க்கு
ஆருதலானாள்!
பசி என்றோக்கு
அன்ன பூரணியானாள் !
அதனாலே ஊருக்கே
அவளென்றும் வற்றாத
ஆன்மிக ஊருணியானாள் !
அவளொரு தெய்வப்பிறவி
அவளுக்குத் திருமணம் செய்ய
எண்ணினார் தந்தை !
ஜாதகத்தைப் பார்த்ததும்
ஜோதிடர் சொன்னார்,
“அவளுக்கு இல்லை
திருமண சிந்தை !
அவள் ஒரு தெய்வப்பிறவி
சுயம்புவான துறவி !”
எப்பொழுதும் போலவே
அவள் இயல்பாய் இருந்தாள்
சொப்பன வாழ்வின்
சொகுசை மறந்தாள் !
ஊருக்கு வெளியில்
ஒரு ஆலமரத்தடியில்
கூடியிருந்த பக்தர்கள் முன்பு
பாட்டுப் பாடினாள் !
மழைவரும் நேரம்
தன்னை மறந்து
கூட்டுப் பிராத்தனை செய்தாள் !
எங்கும் பெய்தமழை
அங்கு அவர்களைச் சுற்றி
மட்டும் பெய்யாமல்
அருள் பெய்தாள் !
எல்லோருக்குமே அம்மாவானாள்
நாளுக்கு நாள்
பக்தர் கூட்டம் கூடியது !
அதுகண்டு தந்தையின்
முகம் வாடியது !
“நீ ஏன் இப்படி
கஷ்டப்படுகிறாய்” என்றார் !
“கஷ்டப் படுபவர்களின்
அகம் தேடியது” என்றாள் !
அப்பா சுகுணானந்தரிடம்
வீட்டுத் தொழுவத்தில் இடம்
கேட்டுப் பெற்றாள் பூசைக்கு !
அப்பாவி மக்கள்
நல்வாழ்வு காணும் ஆசைக்கு !
பசுவைத் தொட்டுக் கொண்டே
பாலகிருஷ்ண
சிசுவின் மீது மெட்டுப் போட்டு
ஆனந்தக் களியாடினாள் !
பக்தர்கள் மனத்தை
ஆகாய வெளியாக்கினாள் !
……(நம்மோடு இன்னும் தொடர்வாள் அம்மா)

