நான் அறிந்த சிலம்பு – 193

-மலர் சபா

மதுரைக் காண்டம் – 07: ஆய்ச்சியர் குரவை

பாட்டு

மாயவனது வருகையையும் குழலோசையையும் பாடுதல்

வஞ்சத்தால் வந்து நின்ற கன்றினைக்
குறுந்தடியாகக் கொண்டு
விளாமரத்தின் கனிகளை உதிர்த்த மாயவன்,
இன்றைய பொழுதில்
நம் ஆநிரைப்பக்கம் வருவானாயின்   krishna

அவன் ஊதும் கொன்றைக் குழலின்
இனிய இசையைக் கேட்டு நிற்போம் தோழி! 

பாம்பினைக் கயிறாகக் கொண்டு
கடல் கடைந்த மாதவன்,
இன்றைய பொழுதில்
நம் ஆநிரைப்பக்கம் வருவானாயின்
அவன் ஊதும் ஆம்பற் குழலின்
இனிய இசையைக் கேட்டு நிற்போம் தோழி! 

நமது கொல்லையைச் சார்ந்த இடத்தில்
வஞ்சத்தால் வந்து நின்ற
குருந்தமரத்தினை முறித்தெறிந்த மாயவன்,
நம் வழிபாட்டின் பயனால்
இன்றைய பொழுது
நம் ஆநிரைக்கு வருவானாயின்
அவன் ஊதும் முல்லைக் குழலின்
இனிய ஓசையைக் கேட்டு நிற்போம் தோழி! 

அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:

http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram9.html

படத்துக்கு நன்றி: கூகுள்

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *