கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
கண்ணனை விட அவர் குழல் தூய்மையானது….
அதான் கண்ணுக்கு தெரியல….காது கொடுத்தால்
கீதா கானம் கேட்கும்….
”தாய்மை ததும்ப திமிலில் கரம்வைத்து,
தூய்மைக் குழல்கொண்டு தாலாட்டாய் , -வாய்மை
பிறந்தது பார்தர்க்காய், பாரதத் தாழ்ப்பாள்,
திறந்தது கீதை தடால்’’….கிரேசி மோகன்….
திமில் -பசுவின் புறமுதுகு….