-மீ.விசுவநாதன்

நாக்கில் நரம்பை வைக்கவில்லை – அது
நல்லதோ தீதோ தெரியவில்லை!
தாக்கும் நோக்கில் பேசுகிறேன் – அதில்
தாயது பிறப்பை விளாசுகிறேன்!

காதல் உறவைக் கொச்சையாக்கி – ஒரு
கணமதில் தீச்சொல் வீசுகிறேன்!
ஈதல் அறத்தைப் பிச்சையென – கை
நீட்டுற அவனைத் துரத்துகிறேன்!

வேதம் சொல்லும் நாவினையே – வேறு
விதமெனச் சொல்ல வைக்கின்றேன்!
பேதம் நாவில் இல்லையடா – புத்தி
பிறழ்கிற அவல வேளையடா!

பாலும் விடமும் எதுவென்றே – சரி
பார்க்கிற நாவை அடக்குகிறேன்!
தோலும் சதையும் எரியுமுன்னே -நல்ல
தோழனைப் போலப் பழக்குகிறேன்!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *